tamilnadu

img

மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டுகோள்....

மதுரை:
மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  மருந்தாளுநர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் ஆகியோர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழக முதல்வர் 2000 மினி கிளினிக்குகளை  அமைப்பதை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வரவேற்கிறது. மக்கள் நோக்கி மருத்துவம் என்பது மகத்தானது.மினி கிளினிக்  அறிவிப்பினை வெளியிட்ட  தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்களுக்கு  சங்கத்தின் சார்பில்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.இத்திட்டத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் அடிப்படை பணியாளர்  பணி மட்டுமேஉருவாக்கப்பட்டுள்ளது.மினி கிளினிக்குகளுக்கு  வருகை தரும்   நோயாளிகளுக்கு  மருந்துகளை வழங்கும்பணிக்கு மருந்தியல் படித்த மருந்தாளுநர் பணி என்பது மிகவும் அவசியமானது. 1948 மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுநர் மட்டுமே கையாள வேண்டும் என்ற அடிப்படையிலும் மக்கள் நலன் கருதியும் மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தி மீண்டும்  வேண்டுகிறது.இது குறித்து  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்,  சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இயக்குநர் பொதுசுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் விரிவான முறையீடு வழங்கப்பட்டுள்ளது.மக்கள் நலன் கருதி தமிழக அரசு மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

;