வீட்டுமனை சிறப்பு திட்டம் பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பலூர், மூலக்காடு மற்றும் ஈச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மொத்தம் 65 நபர்களும், அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் சு.கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சு.சொர்ணராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.