tamilnadu

காலணா உதவி கொடுக்க ஓரணா செலவு! தமிழக அரசு கவனிக்குமா? - டி.குமார்

கட்டுமான வாரியத்தில் உள்ள நிதியினை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், சமூகப் பாதுகாப்புக்கு மட்டும் செலவிட அரசு முன்வர வேண்டும்.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதியன்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலா ளர் 35ஆவது வாரியக் கூட்டம் நடை பெற்றது. இதில் கட்டுமானத் தொழிலாளர்க ளின் கோரிக்கையை அமலாக்க, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் கொடுக் கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், முந்தைய அரசு 2019 செப்டம்பர் மாதம் ஓய்வூதியம் ரூ.3000 (தற்பொழுது கர்நாடகா, தில்லி மாநிலத்தில் அமலாக்கப்பட்டுள்ளது.), இயற்கை மர ணத்திற்கு உதவித் தொகை ரூ.2 லட்சம், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவி, பென்சன் பெறக்கூடிய தொழிலாளர்கள் மரணமுற்றால் உதவி நிதி ரூ.5000, வாரியத்தில் ஆண் தொழிலா ளர் பதிவு செய்திருந்தாலும் அவரின் மனைவி யின் பிரசவத்திற்கு ரூ.6000 என்று தமிழக கட்டுமான வாரிய கூட்டத்தில் அறிவித்தது. ஆனால் முந்தைய அரசு அரசாணை வெளி யிட்டு அமலாக்கப்படாதது முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திருமண உதவி, சமூகப் பாதுகாப்பு  திட்டத்தில் வழங்கப்படுவது போல் ரூ.50 ஆயிரம் உதவி, உபகரணங்கள் வாங்குவ தற்கு மானியத்தில் ரூ.2 லட்சம் கடன், வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு, இஎஸ்ஐ, பிஎப் திட்டம் அமலாக்கம், கர்நாடகா மாநிலத்தில் வழங்குவது போல பொறியா ளர், மருத்துவப் படிப்புக்கு ரூ. ஒரு லட்சம், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை ரூ.1000, உயர் கல்விக்கு ரூ.1 லட்சம் என்பது போல் தமிழக நல வாரியத்தில் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ், நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அரசுத் துறை கட்டுமான பணிகளில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், நல வாரிய நிதியை அரசின் பிற திட்டங்களு க்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. 

அதிர்ச்சியளித்த  நிதிநிலை அறிக்கை 

ஆனால் 35ஆவது வாரிய கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாரியத்தில் 34 லட்சம் தொழிலாளர் இருந்தனர். ஆனால் இப்போது பதிவு விடுபடாமல்,  புதுப்பித்தல் உடன் உள்ள தொழிலாளர் எண்ணிக்கை 17 லட்சத்து 13 ஆயிரத்து 72 பேர் மட்டுமே. மற்ற தொழிலாளர்களை புதுப்பிக்க நல வாரியமும், அரசும் முன்முயற்சி எடுக்கவில்லை. போதுமான உதவிகளை அரசு கொண்டு செல்லாததாலும், நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளாமல் தொழிலாளர்கள் விடுவித்துக் கொண்டுள்ளனர். 

1995 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நல வரியாக ரூ.4747.11 கோடி வசூல் ஆகி யுள்ளது. ஆனால் 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 26 ஆண்டுகளில் தமிழக நல வாரி யத்தில் 940.70 கோடி (சுமார் 20 சதவிகிதம்) மட்டும் உதவி வழங்கப்பட்டுள்ளது. தொழி லாளர்களுக்கு போதுமான அளவில் உதவி வழங்குவதிலும், நல வாரியச் செயல்பாட்டிலும் அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது.

இந்நிலையில் முந்தைய அரசு நலவாரிய நிதியைப் பல்வேறு அரசு திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்தது. பெரு நகரப் பகுதிகளில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, அரசு ஐடிக்கு உதவி, நடமாடும் மருத்துவமனை, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மாறாக கட்டு மான தொழிலாளர் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க செலவு ஏற்பது, மேலும் நல வாரியத்தில் பதிவு செய்த தொழி லாளர்களுக்கு அம்மா உணவகத்தில் ரூ.56 என தீர்மானித்து பணம் எடுக்க முடிவெடுத் ததை தொழிற்சங்க போராட்டங்களால் கைவிட்டது.

நியாயமற்ற செயல்

இந்நிலையில் 35ஆவது வாரிய கூட்டத்தில், கட்டுமான நல வாரியத்தில் 17 லட்சம் பேர், மற்ற 17 அமைப்பு சாரா நல வாரியங்களில் சுமார் 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகச் செலவுகள் மற்றும் பதிவு புதுப்பித்தல் பணப் பயன்கள் இவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு அதற்கு உண்டாகும் செலவுகளில் 80 சதவிகிதம் கட்டு மான வாரிய நல நிதியில் இருந்தும், 20 சத விகிதம் ஆட்டோ மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் நிதியில் இருந்தும் செலவு செய்வது என்பது அதிர்ச்சி யளிக்கிறது. 

கட்டுமான நலவாரியம் மற்றும் ஆட்டோ நல வாரியம் ஆகிய இரண்டும் சுய நிதியை உரு வாக்கி செயல்படுகின்றன. மற்ற 16 வாரியங்க ளும் அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு தொழிலாளர் துறைக்கு, நல வாரிய நிதியில் நிர்வாகச் செலவு செய்ததை ஏற்க முடியவில்லை. தமிழக கட்டு மானத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு க்கு சேர்த்துள்ள கட்டுமான நல வாரிய நிதியில் 11 மாத காலத்தில் (1.12.2020 முதல் 30.11.2021 வரை) சுமார் 200 கோடி (80 சதவிகிதம்) செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளில் வெறும் 940.77 கோடி உதவி கொடுக்கப்பட்டுள்ளது, நியாயமற்ற செயலாகும். எனவே 17 நல வாரியங்களில் இருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகங்களுக்கு நிர்வாகச் செலவை அரசு நிதியிலேயே செய்ய வேண்டும். கணினி மயமாக்குதல் செலவை அரசே ஏற்க வேண்டும். கட்டுமான வாரியத்தில் உள்ள நிதி யினை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற் கும், சமூகப் பாதுகாப்புக்கு மட்டும் செலவிட அரசு முன்வர வேண்டும். 

35ஆவது வாரிய கூட்ட முடிவுகள்

 பொங்கல் பரிசு வேட்டி, சேலை, உணவுப் பொருட்கள் கிப்ட், மழைக் கால நிவாரணம் ரூ.2000த்தை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ரூ.5000 போனஸ் கேட்டது வழங்கப்படவில்லை. கொரோனா இரண்டாம் அலையில் ரூ.5000 அரசிடம் கேட்டோம். அதுவும் வழங்கப்படவில்லை. பக்கத்தில் உள்ள சின்ன மாநிலமான புதுச்சேரி யில் ரூ.3000 போனஸ் வழங்கியுள்ளனர். நிதி  இருந்தும் தமிழகத்தில் போனஸ் தரவில்லை. எனவே தொடர் மழையால் வேலையிழந்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும். பெண்க ளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் ரூ.1000 என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு நேரடி பதிவை உறுதிப் படுத்த வேண்டும். வீடற்ற தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும். நிலம் வைத்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் தருவது ஆகிய வாரிய கூட்ட முடிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிலம் இல்லாதவர்களுக்கும், வீடு உத்த ரவாதப்படுத்த வேண்டும்.

6ஆம் வகுப்பு முதல் கல்வி என்பதை ஒன்றாம் வகுப்பில் இருந்து அறிவிக்க வேண்டும். திருமண உதவி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பிரசவ உதவி ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் திட்டம் அமலாக்க வேண்டும். நலவாரிய அட்டை புதுப்பித்தல் மற்றும் ஓய்வூதியத்திற்கு தொழிற் சங்க அங்கீகாரம் அளிக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். காலதாமதமின்றி விபத்து ஓய்வூதியம் அரியர்சுடனும் மற்ற பணப் பயன்கள் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கட்டிட கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

கட்டுரையாளர் : சிஐடியு கட்டுமான தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர்