சென்னை, பிப். 19- ரேசன் கடையில் பயனா ளிகள் தரமான பொருட்கள் பெறு வதை உறுதிப்படுத்த வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமை யிலான அரசு ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் பொருட்க ளின் தரம் குறித்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி யுள்ளது. அரவை ஆலைகளிலும், அரசு கொள்முதல் செய்யும் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்து அனைத்து ரேஷன் பொருட்களையும் தரமானதாக வழங்க வேண்டும் என்று சம்பந்த ப்பட்ட துறை அமைச்சர் உத்தர விட்டிருந்தார்.
தமிழகத்தில் தற்போது ரேசன் பொருட்களின் தரம் குறை வாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு மட்டு மல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இலவசமாக வழங்க ப்பட்ட 21 பொருட்கள் தரம் குறைவானதாக இருந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அண்மையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து கூட்டுறவு சங்கத்தினரும் பரிசோதிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, ரேசன் கடை கள் உரிய நேரத்தில் திறக்கப்படு வதை உறுதி செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் பொருட்கள் பராமரிப்பு, சரியான கையிருப்பு, கணக்குகளை பராமரித்தல், விற்பனை தொகையை தினசரி தலைமையகத்தில் செலுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். ரேசன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் தடை இல்லாமல் வழித்தட அட்ட வணையின் படி எந்த விலகலும் இல்லாமல் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, மாதந்தோறும் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கு நகர்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொதுவிநியோக திட்ட நகர்வு வாகனங்கள் மூலம் ரேண்டமாக சரக்கு ஏற்றப்படுவதற்கு முன் பும், பின்பும் எலக்ட்ரானிக் எடை மேடைகளில் எடை போடுவது அவசியம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் வழங் கப்படும் வழங்கல் ஆணைகள் மற்றும் அனைத்து எடை ரசீதுகள் நகர்வு பணியாளரால் சரிபார்க்க வேண்டும். மாதத்தில் குறைந்தது 25 விழுக்காடு வழங்கல் ஆணை களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விதி) சரிபார்க்க வேண்டும். ரேசன் கடையில் தரமான பொருட்கள் பெறுவதை உறு திப்படுத்த வேண்டும். அதே போல் பொருட்கள் தரமற்றது என்று கண்டறியப் பட்டால் அவற்றை உடனடியாக டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு திரும்ப அனுப்பி அதன்பிறகு மாற்று பொருட்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பொது விநியோக திட்ட ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இணக்க மான முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து ரேசன் அட்டைதாரர் களுக்கும் கட்டுப்பாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் இடம் பில்லில் இருந்து எந்த விலகலும் இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் விற்பனையாளர் எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் இரண்டு முழு நேர நியாய விலை கடைகளுக்கு மேல் நிர்வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட்டுறவு சங்கங் களில் இருந்து போதுமான பணி யாளர்களை பரவல் முறையில் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.