tamilnadu

img

மகிழ்ச்சி மட்டுமல்ல; பெரும் உந்து சக்தி - என்.பாண்டி,

தீக்கதிர் வார ஏட்டின் முதல் இதழ் 1963ம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தொழிற்சங்கத் தலைவர் தோழர் அப்பு அவர்களால் கோவையில் வெளியிடப்பட்டது. இன்று தினசரியாக வளர்ந்து 60 ஆண்டு களை கடந்து வைர விழாவை மகிழ்ச்சியோடு நிறைவு செய்கிறோம்.  தீக்கதிரை உருவாக்கி 60 ஆண்டுகளாக பாதுகாத்த நமது தலைவர்கள் மற்றும் தோழர்களின்  உழைப்பையும் தியாகத்தையும் இந்த தருணத்தில் எண்ணிப் பார்க்கிறோம்; போற்றுகிறோம். அதே போல் தீக்கதிர் வளர்ச்சி யில் அன்றிலிருந்து இன்று வரை தீக்கதிர் அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உழைப்பு அளப்பரியது.  உள்ளங்கையில் உலகம் என்பது போல இன்றைய நவீன உலகின் வளர்ச்சியான வலைத் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பின்தங்கி விடாமல் தீக்கதிர் பயணித்து வருகிறது. தீக்கதிர் எண்மப் பதிப்பு பல லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வ.உ.சிதம்பர னார்,  மகாகவி பாரதியார்,  வாஞ்சிநாதன்,  ஒண்டி வீரன்  உள்ளிட்ட மகத்தான தீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்திற் கெதிராக கிளர்ந்தெழுந்த மண் நெல்லைச் சீமை. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பல மாதங்கள் சிறைவைக்கப்பட்டிருந்த பிபின் சந்திரபால், 1908-ல் விடுதலை செய்யப்பட்ட போது அவரது விடுதலையை தூத்துக்குடியில் கொண்டாடிய பிறகு நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் உட்பட பல போராட்டங்களுக்கு வித்திட்ட மண் நெல்லைச் சீமை. அதே போல் இடதுசாரி இயக்கத்திற்கும் எழுச்சியான பாதை வகுத்த பூமி இது. ஏ.நல்லசிவன், ஆர்.நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்களை உருவாக்கிய மண்.  அவர்கள் காட்டிய பாதையில், ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளின் குரலாகவும், நெல்லை மக்களின் வேலியாக காத்திடும் நாளிதழாக தீக்கதிர் விளங்கும் என்றால் அதில் ஐயமில்லை.   தற்போதைய அரசியல் சூழலில், ஒன்றிய பாஜக அரசு ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து சமூக ஊடகங்கள் மூலமாகவும் இடைவிடாத அவதூறுப் பிரச்சாரங்களை நாடு முழுவதும் பரப்பி வருகிறது.  இத்தகைய நிலையில், நெல்லையில் தீக்கதிர் பதிப்பு துவங்குவது தமிழக  உழைக்கும் வர்க்கத்திற்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, பெரும் உந்து சக்தி ஆகும்.  ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் மக்கள் விரோத ஆட்சிக்கெதி ராக, இடதுசாரி இயக்கத்தில் கட்சியின் வலுமிக்க போராட்டங்கள் பற்றிய செய்திகளை மக்களிடம் மேலும் கொண்டுச் செல்ல  இன்று புதிதாய் தொடங்கப்படும் தீக்கதிர் நெல்லை பதிப்பு வளர அனைத்து தரப்பு வாசகர்கள், முகவர்கள், வணிகர்கள், விளம்பரதாரர்கள் தொடர்ந்து பேராதரவு நல்கிட வேண்டுகிறோம்.