tamilnadu

“எந்த விவசாயியும் வங்கி கடன் கேட்கமாட்டாங்க”!

சென்னை,மார்ச் 25- அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் மாநில அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு சட்டப் பேரவையில் பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,“ கீரை விவசாயம் செய்பவர்க ளுக்கு கீரை விற்பதற்கான உதவிகள் கொடுத்திருக்கி றோம். நெல் விவசாயத்திற்கு நெல்லுக்கான உதவிகளைக் கொடுத்திருக்கிறோம். கரும்பு விவசாயிக்கு கரும்பு க்கான உதவிகள் கொடுத் திருக்கிறோம்” என்றார். இப்போது பத்து மாதக்  குழந்தை. இது வளரும் போது பத்து ஆண்டு காலத்திற்கு பார்க்கும்போது விவசாயிகள் எந்த வங்கிகளி லும் சென்று கடன் கேட்டு நிற்கமாட்டார்கள். அதுதான் இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறி னார். இந்த பட்ஜெட்டினால் விவசாயிகள் பத்து ஆண்டுக ளுக்குப் பிறகு வங்கிகளில், சொசைட்டிகளில் சென்று கடன் கொடுங்கள் என்று  கேட்கக்கூடிய வாய்ப் பில்லாமல் தன்னிறைவு பெற்ற விவசாயியாக மாறக்கூடிய திட்டங்களை அறிவித்திருக்கிறோம். கரும்புக்கு நிலுவைத் தொகை கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். தற்போது கரும்பு விவசாயி களுக்கு ரூ.150 கோடிதான் நிலுவைத் தொகை உள்ளது. அதுவும் தனியார்  ஆலைகள். இரண்டும் மூடப் பட்ட ஆலைகள். அதுவும் நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் இரண்டு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. அடுத்து, தமிழக  அரசுத் துறையில் இயங்கு கின்ற கரும்பு ஆலைகளில் கிட்டத்தட்ட 680 கோடி ரூபாய் அவர்கள் வைத்துச்சென்ற கடனை நாங்கள் வந்து தீர்த்திருக்கிறோம் என்றார்.