tamilnadu

img

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்குக!

நாகப்பட்டினம், ஜன.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட மன்றக் குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான நாகைமாலி புதனன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை அவ ரது இல்லத்தில் சந்தித்து மனு ஒன் றினை அளித்தார்.  அந்த மனுவில், “கடந்த 5.8.2012 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத் தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி, தமிழ்நாட்டில் புதிதாக உரு வாக்கப்பட்ட தமிழ்நாடு உணவு பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை யில் சட்ட விதிகளின்படி, ஏற்கனவே உணவு ஆய்வாளர்களாக பல ஆண்டு களாக பணிபுரிந்து வந்தவர்கள் மட் டுமே உணவு பாதுகாப்பு அலுவலர் களாக அறிவிக்கை செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.  

கடந்த ஆட்சியில் உணவு பாது காப்பு அலுவலர்களுக்காக வெளி யிடப்பட்ட பணிவிதியில் சட்டப்பூர்வ விதிகளின்படி நியமிக்கப்பட்டு பணி யாற்றி வரும் மேற்படி உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு பணிவிதியில் பணிப் பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என தெரியவருகிறது.  எனவே உணவு பாதுகாப்பு அலு வலர்களுக்கான பணிவிதியில் உரிய திருத்தம் செய்து பணிப் பாதுகாப்பு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுகிறேன். மேற்கண்ட ஆணையை வெளியிடுவதால் அர சுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற் படாது” என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். மேற்கண்ட மனுவை சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி அளித்த போது, தமிழ் மாநில உணவு பாது காப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.எஸ்.முருகேசன், மாநில பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் ஆர். வேலவன் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.