மூணாறு, ஜுன் 23- 95 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப் பட்ட மூணாறு - மாட்டுப்பெட்டிக்கு இடையே யான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணி கள் துவங்கின. கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்த புரத்தில் கேரள ரயில் போக்குவரத்து வளர்ச்சி கழக உயர் அதிகாரிகளின் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட் டத்தில் இந்த ரயிலை மீண்டும் இயக்கு வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கான சாத்தியப்பாடு குறித்த ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட் டது. அதன்படி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி கழக (டிடிபிசி) செயலர் ஜயன் பி.விஜயன், கேடிஎச்பி நிறுவனத்தின் மூதுநிலை மேலாளர் அஜய் உள்ளிட்டோர் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மூணார், மாட்டுப்பெட்டி, குண்டள ஆகிய இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 95 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ரயிலின் அடையா ளங்களையும் கண்டறிந்தனர். டார்ஜிலிங்கில் இயங்கும் இமாச்சல் ரயிலை மாதிரியாக கொண்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 முதல் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்படும். முன்பு ரயில் இயக்கப்பட்ட வழித்தடத்தை உறுதிப்படுத்தி பயன்பாட்டுக்கு உரிய சூழ்நிலைகளை உருவாக்கவும் சுற்று லாத்துறை அமைச்சர், கேரள ரயில்வே வளர்ச்சிக் கழக அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.