tamilnadu

img

பாலாமுரு - ரங்காரெட்டி நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் மோடி அரசு

பாலாமுரு - ரங்காரெட்டி நீர்ப்பாசன திட்டத்திற்கு  நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் மோடி அரசு

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் நடை பெற்று வரும் பாலாமுரு  - ரங்காரெட்டி நீர்ப்பாசன திட் டத்தை (லிப்ட்) பார்வையிட்டு, பணி யின் முன்னேற்றத்தை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ் ணன் ஆய்வு செய்தார். விஜூ கிருஷ்ணன் உடன் தெலுங்கானா விவசாயிகள் சங்கத்தின் தலை வர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆய்வுக்குப் பின் விஜூ கிருஷ்ணன் கூறுகை யில்,”பாலாமுரு - ரங்காரெட்டி நீர்ப்பாசன திட்டம் 6 மாவட்டங்க ளில் உள்ள விவசாயிகளுக்கு உயிர்  நாடியாக அமையும். அதே போல 12.50 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்  பாசன வசதியையும் அளிக்கும்.  குறிப்பாக பல்வேறு மாவட்டங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அமையும்.  தற்போதைய சூழ்நிலையில், நாகர்கர்னூல் வறட்சி மற்றும் மிகக்  குறைந்த மழையால் பாதிக்கப் பட்டுள்ளது. ஆனால் பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு தேவை யான நிதியை ஒதுக்காததால் திட்  டம் தாமதமாகிறது. இது ஆசியா வின் மிகப்பெரிய லிப்ட் நீர்ப்பாசன  திட்டம் ஆகும். இதில் 145 மெகா வாட் திறன் கொண்ட 9 மோட்டார் களும் உள்ளன. ஆனால் ரூ. 35,000 கோடி மதிப்பீட்டில் தொடங்  கிய இந்த திட்டம், இப்போது ரூ. 60,000 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் தாமதம் ஏற்பட்டால் செலவு மற்றும் நீர்ப்பாசன வசதி  கிடைப்பது பாதிக்கப்படும்.  தேசிய  திட்டத் தகுதி மற்றும் நிதி உதவி என்று உறுதியளித்த ஒன்றிய பாஜக அரசோ இப்பொது திட்டத்  திற்கு நிதி ஒதுக்காமல் விவசாயி களை வஞ்சிக்கிறது. அதனால் பாலாமுரு - ரங்காரெட்டி திட்டத்  திற்கு தேசிய தகுதி வழங்க வேண்டும். வறட்சி பாதிப்புப் பகுதி களுக்கு எதிரான பாகுபாட்டை மோடி அரசு நிறுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் நீர்ப்பாசன திட்டங்களை முடிக்க  வேண்டும்” என அவர்  வலியுறுத்தி யுள்ளார்.'