மோடி அரசே ஆளுநரை பதவி நீக்கம் செய்க! தமிழகத்திற்கான நிதியை வழங்குக! சாஸ்திரி பவனை சிபிஎம் முற்றுகை!
சாஸ்திரி பவனை சிபிஎம் முற்றுகை!
சென்னை, ஏப். 25 - தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல், மாநில மக்களைப் பல வகைகளிலும் வஞ்சித்து வருவது டன், உச்சநீதிமன்றம் தலையில் குட்டியும் கூட ஆர்.என். ரவியை, ஆளுநர் பதவியிலிருந்து நீக்கு வதற்கு ஒன்றிய பாஜக அரசு மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்து, வெள்ளி யன்று (ஏப்ரல் 25) சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஆர். வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் எல். சுந்தரராஜன், ஐ. ஆறுமுகநயினார், ஜி. பிரமிளா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க. பீம்ராவ் உள்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நூறுநாள் வேலைத்திட்ட பாக்கித்தொகை 3 ஆயிரத்து 796 கோடி ரூபாய் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்து ரைத்த முதியோருக்கான ரயில் கட்ட ணச் சலுகையை வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், சாஸ்திரி பவனை முற்று கையிடும் வகையில் முன்னேறிச் சென்றனர். ஆனால், காவல்துறை யினர் தடுப்புகளை வைத்து தடுத்தனர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கொரு நியாயம்? இங்கொரு நியாயமா? மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பெ. சண்முகம், “தீர்ப்புக்கு எதிராக ஆளு நர் தொடர்ந்து நடந்து கொள்கிறார் என்றால் உச்சநீதிமன்றத்தை அவமதிக் கிறார் என்றுதான் பொருள். ஆளுநர் நடத்தும் மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள்தான் கோரின. அரசுத் தரப்பில் வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் நடத்திய மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்தது மிகமிக நியாயமானது. சரியானது. புற க்கணிப்புக்கு பிறகாவது மாநாட்டை ஆளுநர் ரத்து செய்திருக்க வேண்டும். மாறாக, பிடிவாதப் போக்கோடு, மாநில அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கும் நோக்கோடு மாநாட்டை நடத்தியுள்ளார்” என்றார். நாடாளுமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் உயர்ந்தது அல்ல என்று குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் கூறியது தொடர்பான கேள்வி க்கு பதிலளித்த அவர், “குடியரசுத் துணைத்தலைவர் அவரது வாதத்தை தமிழ்நாட்டிற்கும் பொருத்துவாரா? ஆளுநரை விட, தமிழ்நாடு சட்டமன்றம்தான் உயர்ந்தது என்று கூறுவாரா? ஒன்றிய அரசுக்கு ஒரு நியாயம், தமிழக அரசுக்கு ஒரு நியாயமா?” என்றார்.
மோடி ஆட்சி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு : உ. வாசுகி சாடல்
போராட்டத்தை வாழ்த்தி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார். அவர், “மோடி ஆட்சி நாட்டிற்கும் கேடு, வீட்டிற்கும் கேடு என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லவும், மோடியை எச்சரிப்பதற்காகவும் இந்த போராட்டம் நடக்கிறது. ஒன்றிய அரசு மக்கள் விரோத, அதிகார குவியலை அதிகப்படுத்துகிற, உழைக்கும் மக்களுக்கு விரோதமானதாக உள்ளது. பாஜக ஆட்சியை தனிமைப்படுத்த வேண்டும், தோற்கடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் போராடுகிறோம்” என்றார்.
ஆளுநர் ரவி இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது '
சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது: இந்திய அரசியல் சாச னத்திற்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்பிறகும், ஆளுநர் சட்டவிரோதமாக பதவியில் நீடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர், தானாக முன்வந்து பதவி விலக மாட்டார் என்பதால்தான், அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும், அவர் திருந்தவில்லை என்பதற்கு உதாரணமாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளார். அந்த மாநாட்டில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஒரு துணைவேந்தர் கூட கலந்து கொள்ளாமல், ஆளுநருக்கு பலத்த அடியை கொடுத்துள்ளனர். துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநருக்கு உரிமை, அதிகாரம்இல்லை. அவர் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவது சட்டவிரோதம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆளுநர் நடத்தும் மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை யேற்று துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித் துள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. சோற்றில் மண்ணள்ளிப் போடும் ஒன்றிய பாஜக அரசு கிராமப்புற மக்களுக்கு அரசு சார்பில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளது. ஆனால், அந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 4 மாதமாக கூலி வழங்கப்படவில்லை. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு 3 ஆயிரத்து 796 கோடி ரூபாயை, தமிழத்திற்குத் தராமல் பாக்கி வைத்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகிறது. பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 157 கோடியை வழங்க மறுக்கிறது. மாநில அரசோடு கடும் மோதல் போக்கை மேற்கொள்கிறது. மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. எனவே, மாநிலத்திற்கான நிதியை உடனடியாக வழங்குவதோடு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு அரசும் வற்புறுத்துகின்றன. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் பயண கட்டணச் சலுகையை, கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு பறித்துவிட்டது. கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் திரும்ப வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதனையேற்று அவற்றை செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.