tamilnadu

img

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம் அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம் அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, ஜுன் 23-   வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்ததாவது:   இம்முகாமில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து அறிந்து கொண்டு, தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், துறை சார்ந்த அலுவலர்களுடனும் கலந்துரையாடி விளக்கம் பெற்றுக்கொண்டனர். மேலும் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தலில் செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை குறித்தும் அறிந்து கொண்டனர் என்றார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), செயற் பொறியாளர் (வே.பொ.) டி.கஸ்தூரிபாய், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சா லன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.