tamilnadu

img

சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம்

சென்னை, ஜூலை 28 - சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு  அம்மைக்கான பரிசோதனை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர் களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மே 6ஆம் தேதி இங்கிலாந்தில்  குரங்கு அம்மை தாக்கம் ஏற்பட்டவுடன் நோய் தடுப்பு நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான  நிலையங்களிலும் வெளிநாடுக ளில் இருந்து வரக்கூடியவர்க ளுக்கு பரிசோதனை மேற்கொள் ளப்படுகிறது.

இங்கிலாந்தில் தொடங்கிய குரங்கு அம்மை பாதிப்பு தற்போது 77 நாடுகளில் கண்ட றியப்பட்டுள்ளது. இந்தியாவில் தில்லி,  கேரளா, தெலுங்கானா வில் 4  பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை குரங்கு அம்மை பாதிப்பு எதுவும்  பதிவாகவில்லை. நாடு முழுவதும் 15 இடங்களில்  குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் குரங்கு  அம்மைக்கான ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி  அளித்துள்ளது. இனி குரங்கு அம்மை பரிசோதனை எடுத்து  அந்த மாதிரிகளை புனேவிற்கு  அனுப்பி வைக்கத் தேவை யில்லை. கிங்ஸ் மருத்துவமனை யில் இருக்கக்கூடிய ஆய்வகத் திற்கு அனுப்பி வைத்து முடிவு களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி னார்.