சென்னை, ஜூலை 22- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி வாய் திறக்காதது ஏன்? என்று தமிழ்நாடு நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மணிப்பூர் கலவரம் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக திமுக தெளிவான கருத்தை தெரிவித்துள்ளது. முதல்வர் கடும் கண்டத்தை பதிவு செய் துள்ளார். நாடாளுமன்றத் தில் திமுக உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார் கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதை கண்டித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், பெண்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அனைவரும் கண்டித்துள்ளனர். ஆனால் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இதுவரை மணிப் பூர் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் யாருக் கும் அடிமையாக இல்லை என்று கூறுகிறார். ஆனால் இதுவரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பழனிசாமியிடம் இருந்து ஒரு வார்த்தைகூட வராததை பார்க்கும்போது, அதிமுக வின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.