tamilnadu

img

குமரி மாவட்டஎல்லையிலிருந்து தியாகிகள் நினைவு ஜோதி

அருமனை, நவ.3- இந்தியா தொழிற்சங்க மையத்தின்  15 வது தமிழ் மாநில மாநாடு குமரியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தியாகிக ளின் ஜோதி எடுத்து வரப்பட்டு மாநாட்டு திடலில் வைக்கப்படு கிறது.இந்த வகையில் கன்னியா குமரி மாவட்டத்தின் கடைக்கோடி யான அருமனை, கடையால், குல சேகரம், மேல்புறம், திரு வட்டார் இன்னும் பல்வேறு பகுதி களில் இருந்து சிஐடியு ஸ்தாப னத்திலிருந்து ஸ்தாபனத்திற்காக அரும்பாடு பட்டுகடைசி வரை முழு மூச்சாக செயல்பட்ட தோழர்களின் நினைவிடங்களிலிருந்து நினைவு ஜோதிகள் எடுத் துவரப்பட்டு மாநாடு திடலில் வைக்கப்படுகிறது.அருமனை வட்டார குழு சார்பாக 12 தோழர்களின் நினைவு ஜோதி எடுத்துவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு பொறுப்பாளர் சசிகுமார் ,தோட்ட தொழிலாளர் சங்க பொறுப்பாளர் ஆபிரகாம்,கட்டுமான தொழிலாளர் சங்க அருமனை வட்டாரச் செயலா ளர் புஷ்பராஜ், கூட்டுறவு சங்க மாவட்ட பொறுப்பாளர் தெய்வ விநாயகம் ,அருமனை பேரூராட்சி தலைவர் லெதிகாமேரி, கவுன்சி லர்கள் ஆமோஸ், ஜெயராணி, அனிதா செலின், மேரி ஜெனோபா, டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் அசோக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேல்புறம்  மேல்புறம் வட்டார குழு சார்பாக ஐந்து நினைவு ஜோதி கள் எடுத்துவரப் பட்டது,  பாகோடு பேரூராட்சி தலைவர் ஜெயராஜ், ஹென்றி பரிமளபாய் ,சுரேஷ் குமார், ஞானதாஸ் ,கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலையில் மாநாட்டு திடலில் எடுத்து வரப்பட்டது.