திருவாரூர், ஜன.19 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் தியாகி ஜெ.நாவ லன் 14 ஆம் ஆண்டு நினைவு தின செவ்வணக்கம் நிகழ்ச்சி தியாகி ஜெ. நாவலன் நினைவிடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பி னர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஜெ.நாவலன் நினைவு செங்கொடியை சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஏற்றி வைத்து, நினைவு ஸ்தூபிக்கு செவ்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பா.கோமதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. வீரபாண்டியன், கே.என்.முருகா னந்தன், கே.தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், கட்சி யின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் உட்பட வெகு ஜன அரங்க தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். வாலிபர் சங்கத்தினர் பேரளம் கடை வீதியில் இருந்து பேரணியாக வந்து மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாவட்டப் பொருளாளர் கே.எம். பாலா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பேரளம் கடைவீதியில் தோழர் ஜெ.நாவ லன் நினைவு பொதுக்கூட்டம் நடை பெற்றது.