tamilnadu

பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பு

சட்டவிதிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநருக்கு மாணவர் சங்கம் கண்டனம்

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  ஏ.டி.கண்ணன்,  மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

இன்று (ஜூலை 13)  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து உயர்கல்வித்துறைக்கோ, இணைவேந்தருக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும்,  கௌரவ விருந்தினர் என பாஜக இணை அமைச்சர் எல்.முருகனை அழைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது குறித்து துணைவேந்தர் தனக்கு எதுவும் தெரியாது.  எல்லாம் ஆளுநர் மாளிகை முடிவு என உயர்கல்வி துறை அமைச்சரிடம் சொல்கிறார் என்றால், இது ஆளுநரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையையே காட்டுகிறது. 

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் (Protocol) மீறப்பட்டுள்ளது. கல்விநிலையங்களை காவிக்கூடாரமாக மாற்ற முயல்வதோடு, மாநில உரிமையை பறித்து கல்வியை மத்தியத்துவப்படுத்தும் வேலையை ஆளுநர் மூலமாக  ஒன்றிய அரசு செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. பாரம்பரியமிக்க ஆற்றல் சார் பல்கலைக்கழகமான மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வரம்புகளை மீறி பட்டமளிப்பு நிகழ்ச்சியை நடத்தும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்கின்றோம். மாணவர் விரோத, மதவெறி அரசியலை புகுத்தும் மோசமான செயல்பாட்டை ஆளுநர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

சென்னை, ஜூலை 12-  மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளு நர் அரசியலை புகுத்துவதாலும் தன்னிச் சையாக விழாவை நடத்துவதாலும் பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு  புறக்கணிக்கிறது. இதுகுறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக பல்கலைக்கழகங் களில் பட்டமளிப்பு விழாவை, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம்,  அதாவது துணைவேந்தர் உள்ளிட்ட வர்கள்தான் நடத்துவது என்பது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்ற நடைமுறை. அதன்  அடிப்ப டையில், புதன்கிழமை (ஜூலை 13)  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. உயர் கல்வித்துறைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல், வேந்தரை மட்டும் அழைத்து துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என்பது உள்ளிட்ட விஷ யங்களை உயர் கல்வித்துறையிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இறுதி செய்யப்படுபவர்களில் ஒரு வரைத்தான் அழைக்க வேண்டும். ஆனால் அதுபோல எதுவும் செய்யப் கடவில்லை. இதுதொடர்பாக துணை வேந்தரிடம் கேட்டால், எனக்கு எதுவும் தெரியாது சார். ஆளுநர் அலுவல கத்தில் இருந்து தகவல் வருகிறது என்கிறார்.

ஆளுநர் அலுவலகத்தில் உள்ள  யாராவது கூட உயர் கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தராக இருக் கக்கூடிய என்னை அழைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து கேட்டி ருக்கலாம். அவர்களும் எதுவும் கேட்கவில்லை. சிறப்பு அழைப்பாளர் களை தலைமை விருந்தினர் என்று குறிப்பிடுவது வழக்கம். கவுரவ விருந் தினர் என்று யாரையும் அழைப்பது இல்லை. கவுரவ விருந்தினர் என்றால்  யாருக்காவது முனைவர் பட்டம் கொடுத்தால், அவரைத்தான் கவுரவ விருந்தினராக அழைப்பது வழக்கம். இப்படித்தான் செய்வோம்: ஆளுநர் அலுவலகம் 

ஆனால் மதுரை காமராசர் பல் கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு  கவுரவ விருந்தினர் என்ற பெய ரில் அழைக்கின்றனர்.  இதுவெல் லாம் தவறான செய்தி.  பட்டமளிப்பு விழாவில் அரசியலை  புகுத்துகின்றசெயல்களிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது. அதன் அடிப்படை யில் உயர் கல்வித் துறை செயலர் உள்ளிட்ட அதி காரிகள் ஆளுநர், துணை வேந்தர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, துணை வேந்தர் ஆளுநர் அலுவலகத்தில் இருந்துவந்த உத்தரவு என்கிறார்கள். ஆளுநர் அலுவலகத்தில் கேட்டால், இப்படித்தான் செய்வோம், என்ன செய்வீர்கள் என பார்க்கலாம் என்கிறார்கள்.

பட்டமளிப்பு விழாக்களில், சான்சலர் பேசுவதற்கு முன்னர் இணைவேந்தர் பேசுவதுதான் வழக்கம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் வேந்தர் தில்லி சென்றுவிட்டார். இணைவேந்தராக  இருந்த நான்தான் அந்த விழாவை நடத்தி பட்டங்களைக் கொடுத்தேன்.

ஆனால், தற்போது எனக்கு அடுத்து பேசுவ தற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்துப் பேச வைக்கவுள்ளனர். இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றை பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்க ளிடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், நான் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.