tamilnadu

img

மதநல்லிணக்க அடையாளமாய் மதுரை சித்திரை திருவிழா

மதுரையில் அனைத்துத்தரப்பு மக்களும் பெருந்திரளாக பங்கேற்று சித்திரை திருவிழா நடைபெறுகிறது.  திருவிழாவின் ஒருபகுதியான ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற தேரோட்டத்தை காண வந்த மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதிக்குழு மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழு சார்பில் நீர்மோர் வழங்கப் பட்டது.கீழவாசல் செயின்ட் மேரிஸ் தேவா லயம் அருகில் நடைபெற்ற மதநல்லிணக்க நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் சதாம் உசேன் தலைமை வகித்தார்.  

தூய மரியன்னை பேராலய பங்கு தந்தை   மரியநாதன் சுவாமிகண்ணு, பல்சமய    உரையாடல் பணிச் செயலர் பெனடிக்ட் பர்ண பாஸ், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன் ஆகியோர்  மக்களுக்கு நீர் மோர் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் .  இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வா, பகுதிக்குழு தலைவர் போனிஃபேஸ், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட பொரு ளாளர் ஜான்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.