tamilnadu

img

மதுரை புத்தகத் திருவிழா துவங்கியது

மதுரை, செப்.23- மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய  புத்தக விற்பனையா ளர்கள் மற்றும் பதிப்பகத்தார் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும்  “மதுரை  புத்தக திருவிழா 2022 “ செப்டம்பர் 23 வெள்ளியன்று துவங்கியது மதுரை தமுக்கத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற துவக்கவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனிஷ் சேகர் தலைமை வகித்தார். தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் துவக்கி வைத்தனர். கூடுதல் ஆட்சியர்-திட்ட இயக்குநர் செ. சரவணன் வரவேற்றுப் பேசினார். பபாசி தலைவர் எஸ். வைரவன் அறிமுக உரையாற்றினார். மதுரை மாநகராட்சி மேயர் வ. இந்திராணி முன்னிலை வகித்தார்.  பொது நூலகத் துறை இயக்குநர் க. இளம்பகவத் சிறப்பு ரையாற்றினார்.  சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், துணை மேயர் தி. நாக ராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநகராட்சி  ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் நன்றி கூறினார்.

;