tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

பூச்சி மருந்தை நுகர்ந்து  பார்த்த சிறுவன் பலி

தேனி, டிச.11- ஆண்டிபட்டி அருகே பூச்சி மருந்தை நுகர்ந்து பார்த்த 9 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டிபட்டி அருகே நாகலகவுண் டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தன குமார். இவருடைய மனைவி மல்லிகா. அவர்களுடைய 2வது மகன் துர்கேஷ் (9).  இந்நிலையில், கடந்த 6ம் தேதி மல்லிகா மற்றும் அவருடைய 9 வயது சிறுவன் துர்கேஷ் ஆகிய இருவரும் அவர் களுடைய கொட்டை முந்திரி காட்டிற்கு மருந்து தெளிப்பதற்காக சென்றிருந்த னர். அப்போது அந்த மருந்தை சிறுவன் நுகர்ந்து பார்த்ததாக கூறப்படுகிறது.  இதனால் சிறுவன் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு கடந்த 9ம் தேதி சிகிச்சை பல னின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து ராஜதானி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது

தேனி, டிச.11- ஆண்டிபட்டி அருகே மது பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுல் செய்தனர்.  ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்ப வர் மகன் ராஜேஷ் (33) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற் பனை செய்து வந்தது தெரியவந்தது.  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

கஞ்சா -குட்கா கடத்தலை தடுக்க  டிஐஜி ஆலோசனை 

தேனி, டிச.11- தேனி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுப் பது தொடர்பாக பார்சல், கூரியர் நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்களுடன் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் பி.விஜயகுமாரி ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கூரியர், பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன் பேரில் பார்சல், கூரியர் நிறுவன உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் தேனி எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் பி.விஜய குமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவீண் உமேஷ் டோங்கரே ஆகி யோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குட்கா, கஞ்சா பார்சல் மூலம் கடத்துவதை தடுக்கும் பொருட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.  சந்தே கத்திற்கிடமான முறையில் பார்சல் வந் தால் தனிப்பிரிவுக்கு தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கணவரை கொல்ல  முயன்ற புதுப்பெண் தற்கொலை கூலிப்படையினர் கைது

தேனி, டிச.11- கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்த விஷயம் வெளியே தெரிந்ததால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன் (24). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) கடந்த நவம்பர் 10-ம் தேதி திரு மணம் நடைபெற்றது. இந்நிலையில், டிசம்பர் 8-ம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுப் பெண் தற்கொலை குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கட்டாயத் திருமணம் செய்ததால் கவுதமனுடன் வாழ விருப்பம் இல்லாமல் இருந்த புவனேஸ்வரி கூலிப்படை மூலம் கவுதமனை கொலை செய்ய ஏற்பாடு செய்ததும், கூலிப்படை மூலம் கூடலூர் தொட்டிப் பாலம் அருகே காரை மோதி கவுதமனை கொலை செய்ய முயன்று கவுதமன் தப்பிவிட்டது தெரிய வந்தது. விசயம் வெளியே தெரிந்து விட்ட தால் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்றனர். கவுதமனை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன் ராஜா (36), பிரதீப் (35), மனோஜ்குமார் (20), ஆல்பர்ட் (34), ஜெய சத்யா (18) ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர். ஜெட்லி என்ப வரை தேடி வருகின்றனர்.