மதுரை மருத்துவக் கல்லூரியில் 6 பேருக்கு கொரோனா
மதுரை, ஜன.10- மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய் யப்பட்டு வருகிறது.
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
திருச்சுழி, ஜன.10- விருதுநகர் திருச்சுழி வட்டம், கல்லூர ணியைய் சேர்ந்த முரளிதரன்-முத்துமாரி தம்பதி. இவர்களுக்கு நிவிஷா என்ற மக ளும், கங்காஸ்ரீதரன்(3) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், முத்துமாரி தனது குழந்தைகளுடன், பனையூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென் றுள்ளார். இந்நிலையில், வீட்டின் முன்பு காங்காஸ்ரீதரன் விளையாடிக் கொண்டி ருந்தபோது, எதிர்பாராதவிதமாக, அரு கில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளான். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, சிறுவனை மீட்டு, திருச்சுழி அரசு மருத்துவமனைக் குக் கொண்டு சென்றனர். அவனை பரி சோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கனவே, இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
திருவில்லிபுத்தூர், ஜன.10- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செய லர் தங்கபாண்டியன் தொடர்ந்து அலு வலகத்திற்கு வராமல் இருக்கிறார் பணி கள் முழுமையாக நடைபெறவில்லை ஊராட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவக்குமார் இருவரும் கண்காணித்து வருகிறோம் உரிய நடவடிக்கை எடுப் போம் என்று பதிலளித்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
திருவில்லிபுத்தூர், ஜன.10- இராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநரான இவர் இராஜபாளையம் செல்லும் சாலையில் தனியார் நிறுவனம் அருகே ஆட்டோவை ஓட்டிச் செல்லும்போது ஆட்டோ கவிழ்ந் தது இராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாரீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மது ரைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத் தனர். செல்லும் வழியில் மாரீஸ்வரன் இறந்தார். வன்னியம்பட்டி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
கைபேசியால் நிகழ்ந்த விபரீதம்: மனைவியை கொன்ற கணவர்
விருதுநகர், ஜன.10- விருதுநகரில் மனைவியை சந்தேகப் பட்ட கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தார். விருதுநகர் மாவட்டம், என்ஜிஓ காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (31). இவர் மதுரை மாவட்டம் திருமங் கலத்தில் உள்ள கனரா வங்கியில் எழுத்த ராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலை யில் மனைவி கற்பகம் (30) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விருதுநகரில் வசித்து வந்தார். மனைவி அடிக்கடி கைபேசியில் பேசி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்க னவே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை யில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற் பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் கண்ணன், மனைவி கற்பகத்தை கத்தி யால் குத்திக் கொலை செய்தார். பின்னர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே பாதையில் தாமிர கம்பிகள் மாயம்
அருப்புக்கோட்டை, ஜன.10- அருப்புக்கோட்டை அருகே மேல தொட்டியாங்குளம் ரயில் பாதையில் 70 மீட்டர் தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற வர்களை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். திருவாரூர் மாவட்டம் மேலகொத்தத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (52) இவர் தனியார் நிறுவனத்தின் நிர்வாகியாகப் பணி புரிந்து வருகிறார். இவரது நிறுவனம் சார்பில் மானாமதுரை-அருப்புக்கோட்டை வரை மின்சார பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி காலை மானாமதுரையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற சிலம்பு விரைவு ரயில் தாமிர கம்பியில் சிக்கி நின்றது. இதனால், மூன்று மணி நேரம் ரயில் தாமதமாகச் சென்றது. இதுகுறித்து நடைபெற்ற விசா ரணையில், அங்கிருந்த 70 மீட்டர் தாமிரக் கம்பிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தனியார் நிறுவன நிர்வாகி ரமேஷ், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
லஞ்சம் கொடுக்க முயன்ற ஊழியர் நீதிமன்றத்தில் காட்டிக்கொடுத்த வழக்கறிஞர்
மதுரை, ஜன.10- மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தில் உதவியாளராகப் பணி புரிபவர் குமாரவேல். இவர் மீது பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவ ருக்கு மூன்று ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013-ஆம் ஆண்டு உத்தர விடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை மூன்று மாதமாக குறைக்கக் கோரி குமார வேல், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்ட வசமானது. மனுதாரர் ஏற்கெனவே தண் டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு வழக்கறி ஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரி யமாகக் கூறியுள்ளார். மனுதாரரின் இந்தச் செயலைக் கடு மையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் கண்கா ணிப்பில் விசாரணை நடத்தி 19.1.2022-இல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்த துடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண் ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ் வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்’’ என கூறினார்.
சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா
விருதுநகர், ஜன.10- விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திதொடரில் கலந்து கொண்டார். பின்பு, சொந்த ஊருக்கு திரும்பிய நிலை யில், உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள் ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தம்முடன் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணம்
விருதுநகர், ஜன.10- விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்த போது, ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.36 லட்சத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங் கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பத்து மாற்றுத் திறனாளி களுக்கு மாதம் தலா ரூ.1000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கி னர். இந்நிகழ்வில்ல் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள.ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சி யர் கிருஷ்ணவேணி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாலியல் தொல்லை; 20ஆண்டு சிறை
தேனி, ஜன.10- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த வர் தங்கசாமி (49). கூலித் தொழிலாளி. ஒன்பது வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தந்தை கொடுத்த புகா ரின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மக ளிர் காவல்துறையினர் தங்கசாமியை போக்ஸோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கடேசன் குற்றவாளிக்கு 20ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்ட னையும், ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
‘நரக மாளிகை’ நூல் அறிமுகம்
திண்டுக்கல், ஜன.10- திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நரக மாளிகை நூல் அறிமுக விழா நடைபெற் றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயலாற் றிய கேரளாவைச் சேர்ந்த சுரேஷ்மின்னி என்பவர் அந்த அமைப்பிலிருந்து முரண் பட்டு வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். என்ற அந்த அமைப்பு குறித்து சுரேஷ்மின்னி ‘நரக மாளிகை’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். தமிழில் கே.சதாசிவன் என்பவர் மொழி பெயர்த் துள்ளார். இந்த நூலின் அறிமுக விழா திங்களன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எஸ்.எஸ்.எஸ். மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அமலாதேவி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வருணன் வரவேற்றார். செம் மலர் மாத இதழ் ஆசிரியர் சோழ.நாக ராஜன் கலந்து கொண்டு நூலை அறி முகம் செய்து சிறப்புரையாற்றினார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி வாழ்த்தி பேசினார். கே.எஸ்.கணே சன் நன்றி கூறினார். (நநி)
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, ஜன.10- பாளையங்கோட்டை தியாகராஜ நகர் ரயில்வே சுரங்கப் பாதையில் ஓடும் பாதாள சாக்கடையை உடனடியாக சீர் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் முபா ரக் அலி தலைமை தாங்கினார். பாளை யங்கோட்டை தாலுகா செயலாளர் துரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் உரை யாற்றினார்.
குரங்குச்சேட்டை; குழந்தை பலி
பாக்பத், (உத்தரப்பிரதேசம்), ஜன.10- உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் இரண்டு மாதக் குழந்தை கேசவ் குமாரை தூக்கிச் சென்ற குரங்குகள் தண்ணீர்த் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள குடி யிருப்புப் பகுதி மொட்டை மாடியில் இரண்டு மாதக் குழந்தை யுடன் மூதாட்டி தூங்கியுள்ளார். அப்போது மாடிகளில் உலவிக்கொண்டிருந்த குரங்குகள் வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டில் புகுந்து குழந்தை யை தூக்கிச் சென்றுள்ளன. உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கண்விழித்து குழந்தை காணாமல்போனதை அறிந்து குழந்தையின் பெற்றோர்களு டன் தேடியுள்ளார். பின்னர் தண்ணீர்த் தொட்டியில் குழந்தை யின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். ஏற்கனவே ஒரு முறை குரங்குகள் தங்கள் குழந்தையை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், ஆனால் உறவினர்கள் அந்த முயற்சியை முறியடித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். சண்டிநகர் காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங் கூறுகையில், “குரங்குகள் தொல்லை பெரிய பிரச்னை யாக உள்ளது, தேவையான நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம்,” என்றார்.
பெரியகுளத்தில் மீனில் ரசாயனம் 200 கிலோ மீன் பறிமுதல்
தேனி, ஜன.10- பெரியகுளத்தில் ரசாயனம் தடவிய மீனை பறிமுதல் செய்து மீன்வளத துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை யினர் நடவடிக்கை எடுத்தனர். பெரிய குளம் தென்கரை சுதந்திரவீதி பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன் வளத்துறை உதவி இயக்குநர் பஞ்ச ராஜ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை யினர் சோதனை நடத்தினர். இதில் மீன் கள் பல நாட்களாக கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் சேர்க் கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதனைத் தொடர்ந்து விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200கிலோ மீனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து 5 வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி
மதுரை, ஜன. 10- மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மூன்றாவது அலை பரவி வரும் நிலையில் தினசரி தொற்று 300 க்கு மேல் பதிவாகி வருகிறது இந்த நிலை யில் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை எடுத்து வரும் நிலையில் 15 வயது முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தற்போது தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலை யில் மூன்றாவது தவணையாக பெரிய வர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்களன்று மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சி யர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையா ளர் மரு.கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனியில் ஆர்டிஐ ஆணையாளர் விசாரணை
தேனி, ஜன.10- தேனி ஆட்சியர் அலுவலகத் தில் மாநில தகவல் ஆணையா ளர் ஆர்.பிரதாப் குமார் மேல் முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டார்:- தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005ன் கீழ் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட் டங்களைச் சார்ந்த மேல்முறை யீட்டு மனுக்களின் நிலை குறித்து மாநில தகவல் ஆணையாளர் ஆர்.பிரதாப் குமார் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் முன்னி லையில் விசாரணை மேற்கொண் டார். இந்த ஆய்வின் போது, மாநில தகவல் ஆணையர் தெரிவித்ததாவது:- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மனுக்கள், திண்டுக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த 11 மனுக்கள், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 மனுக்கள், விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த 10 மனுக்கள் என மொத்தம் 50 மனுக்களில் 42 மனுக் கள் மீது திங்களன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீத முள்ள எட்டு மனுக்கள் மீது விசா ரணை மேற்கொண்டு, மனுதாரர் களுக்கு தகவல்கள் உரிய காலத்திற்குள் அளித்து, அதற்கு ரிய பலன்களை மனுதாரர்கள் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட் டுள்ளது என்றார்.
பிராமணப் பத்திரத்தில் பொய்யான தகவல் ஓபிஎஸ், ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு
மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் விசாரணை துவக்கம்
தேனி, ஜன.10- கடந்த தேர்தலில் பிராமணப் பத்திரத்தில் பொய்யான தகவல் தெரிவித்ததாக நீதி மன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓபி.ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறை யினர் துணைக் கண்காணிப்பாளர் சுந்தராஜ் தலைமையில் விசாரணையை தொடங்கி யுள்ளனர். தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி என்பவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் தனித்தனியாக இரண்டு மனுக் கள் தாக்கல் செய்தார். அந்த மனுக்களில், “கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் தங்க ளின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிர மாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிந்தே குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் மக்களை ஏமாற்றி அவர்கள் வெற்றி பெற் றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தேனி சிறப்பு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து அந்த இரு மனுக்கள் மீதும் தனித்தனியாக உத்தரவுகளை கடந்த 7-ஆம் தேதி மாஜிஸ்தி ரேட்டு பிறப்பித்தார். அதில், “இந்த புகார்கள் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண் டும். இந்த வழக்கில் வாரண்டு இல்லாமல் கைது செய்யக்கூடாது” என்று மாஜிஸ்தி ரேட்டு குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. ஆகி யோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 125 (ஏ)-ன் கீழ் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அரங்க நாயகி வழக்குப்பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் திங்க ளன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் ஆய்வாளர் அரங்கநாயகி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்து கிறார்கள். முதல் கட்டமாக புகார்தாரர் மிலானி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரிடம் உள்ள ஆவணத்தை பெற்றுக்கொன்டு, ஒ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் எம்பி ஆகியோர் சொத்துக்களின் விபரத்தினை பெற உள்ளனர். மேலும் மிலானிக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் தலைமையில் நான்கு காவ லர்கள் துப்பாக்கியுடன் சிறப்புப் பாது காப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு: மாடு உரிமையாளர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே அனுமதி
மதுரை, ஜன.10- ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திங்கள்கிழமை அறி வித்தார். மதுரையில் இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது, அவனியா புரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க நாளை முதல் இணையம் வாயி லாக பதிவு செய்யலாம். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற் போர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம். மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். ஒரு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. அதேபோன்று ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடு மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை. ஒரு ஜல்லிக் கட்டு போட்டியில் 700 காளைகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உள் ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி. உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப்படுவர். இவர்கள் தவிர 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.