காமராஜர் பல்கலை.யில் முறைகேடு மேலும் 20 பேர் சிக்குகின்றனர்
மதுரை, அக்.20- மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடை பெற்ற முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரி கள், ஊழியர்கள் 20 பேரின் பட்டியல் தயா ரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்வு எழுதாமலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்களுடைய முகவரிகள், புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவை அவர்களு டைய விண்ணப்பங்களில் இல்லை. மாண வர்கள் யாரும் பதிவுக் கட்டணம் செலுத்தா மலேயே பதிவுக் கட்டணம் செலுத்தியதாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது உட்பட ரூ.50 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடை பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் கூடுதல் தேர்வாணையர் ராஜ ராஜன், கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி, கார்த்திகைச்செல்வன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள் ளது. தொலைநிலைக்கல்வி இயக்கக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் விசாரணைக்குழு அமைக் கப்பட்டிருந்தது. விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்குழு அளித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை யின் அடிப்படையில் கூடுதல் தேர்வாணை யர் ராஜராஜன், சத்தியமூர்த்தி, கார்த்திகைச் செல்வன் ஆகிய மூவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நீதிபதி அக்பர் அலி தலைமையிலான விசாரணைக் குழு நடத்தி வரும் தொடர் விசாரணையில் இந்த முறைகேட்டில் பல்கலைக்கழக அதி காரிகள், ஊழியர்கள் 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 20 பேரின் அடையாளமும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப் படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டா ரங்கள் கூறும்போது, நீதிபதி அக்பர் அலி தலைமையிலான விசாரணைக்குழு முதற் கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்துள்ளது. முறைகேட்டில் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உடந் தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் தொலைநிலைக் கல்வி மையங்க ளுக்கும், தொலைநிலைக்கல்வி இயக்கக அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புப் பால மாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களின் மூலமாகவே பல்வேறு முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. முறைகேட்டில் தொடர்புடைய 20 பேரின் பட்டியலை விசாரணைக்குழு தயா ரித்துள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத்தொட ர்ந்து முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர். (நமது நிருபர்)
சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் போட்டி
வத்தலக்குண்டு, அக். 20- வத்தலக்குண்டு சக்தி டயாபடிக்ஸ் பவுண்டேசன், சக்திடயாபடிக்ஸ் சென்டர் ஆகியவை இணைந்து சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகளை நடத்தின. நிகழ்விற்கு சக்தி கிளினிக் மருத்துவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். சக்தி கிளினிக் மேலாளர் முகமது சுல்தான் வரவேற்றார். மருத்துவர்கள் கணே சன், சிவசுப்பிர மணியன், இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன், பேரூராட்சிதலைமை எழுத்தர் கலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.