சென்னை,செப்.11- தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலக அளவில் பல்வேறு முன்னணி நிறு வனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடி சர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் தயா ரிப்பை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பு நிகழ்வில், போர்டு நிறுவனத்தின் ஐ.எம்.ஜி. தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் மேத்யூ கோட்லேவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். ஐடி சர்வ் கூட்டமைப்பு அமெரிக்கா வில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங் களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட் வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது. ஐடி சர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தி த்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் திறன் மிகுந்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.