tamilnadu

கள்ளத்தனமாக மது விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது

கள்ளத்தனமாக மது விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது

சிதம்பரம், செப். 8- டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் இந்த பெட்டிக்கடை யில் கூட்டம் வழிந்தோடுவதாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சிதம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கருக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப் பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடையின் பின்புறம் ரகசியமாக அரசின் மதுபான பாட்டில்கள் மற்றும் மதுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள், காலியாக கிடந்த மது பாட்டில்கள் என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட பெட்டிக்கடை உரிமையாளர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து அனைத்திந்திய  மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் மல்லிகா கூறுகையில், "கடந்த காலங்களில் இது போன்ற தகவல்களை காவல்துறையின ருக்கு தகவல் அளித்தாலும் மேலோட்டமாக பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்காததால் பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சிதம்பரம் காவல் நிலை யத்தில் லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளுக்கு காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு தற்போது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.