tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜூலை 9-இல் எல்ஐசி  ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தென்காசி: தென்காசியில் அகில இந்திய காப்பீட்டுக்  கழக ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசு செவி  சாய்க்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங் களில் எல்ஐசி போட்டி போட்டு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. தற்போது நடைபெற்ற விமான விபத்தில் கூட யாரெல்லாம் இறந்ததாக அரசால் அறிவிக்கப்பட்டதோ, அவர் களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை எல்ஐசி நிறு வனத்தால் வழங்கப்பட்டது. எல்ஐசி பணியாளர் பற்றாக்குறை  சரி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள்  அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத் தில் எல்ஐசி முழுமையாக கலந்து கொள்ளும்” என்றார்.

கருத்துக் கணிப்பில்  மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு  (2026) தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தமிழ்நாட்டின்  அடுத்த முதலமைச்சர் யார்? மக்கள் யாரை முதல மைச்சராக்க விரும்புகிறார்கள் என்று, சென்னை லயோலா  கல்லூரி முன்னாள் மாணவர்கள் ‘இந்திய அரசியல் ஜன நாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தி னர். அதில், பிப்.5 ஆம் தேதி முதல் ஜூன் 17 ஆம் தேதி  வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்  கணிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 77.83 சதவீத பேருடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 73.30 சதவீத பேருடன் 2 ஆவது இடத்திலும் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின்  67.99 சதவீத பேருடன் 3 ஆவது இடத்திலும், பாஜக அண்ணா மலை 64.58 சதவீத பேருடன் 4 ஆவது இடத்திலும், தவெக  தலைவர் விஜய் 60.58 சதவீத பேருடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். தற்போது உள்ள சூழலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 17.7 சதவீத பேர் திமுக என்றும், 17.3 சதவீத பேர் அதிமுக என்றும் கூறியுள்ளனர். 12.20 சதவீத  பேர் தவெக என்றும், 5 சதவீத பேர் பாஜகவுக்கு வாக்களிப் போம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது ஆன்மீகம், எது அரசியல்? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: இந்து சமய  அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோவி லில் பொதுநல நிதி மற்றும்  திருக்கோவில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத் தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப் பில் கூறுகையில், “ஜூலை  7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும் திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.400 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 117 திருக் கோவில்களுக்கு குட முழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் பழனியில் 98 கோடி ரூபாய் செலவி லும், திருத்தணி சுப்பிர மணிய சுவாமி கோவிலில்  ரூ.86 கோடி செலவிலும் பணிகள் நடைபெற்று வரு வதோடு, சுவாமிமலையில் ரூ.5 கோடி செலவில்  மின்தூக்கி அமைக்கப்படு கிறது. கடந்த ஆண்டு 2,000 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அழைத் துச் செல்லப்பட்டதை போல் இந்தாண்டும் 2,000  நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள்  அல்லாத 143 முருகன் கோவில்களுக்கு ரூ.1085  கோடியில் 884 திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி இந்த ஆட்சியில் தான் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்து இருக் கிறோம்.  எது ஆன்மீகம், எது  அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் (இந்து முன்னணி)  நடத்துகின்ற மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பணி கள் அறம் சார்ந்த பணி கள், பக்தர்களுக்கு தேவை யான பணிகள், ஆன்மீகப் பணிகள்” என்றார்.

புதிய வரலாறு படைக்கிறது

சென்னை: இந்தியாவில் நெடுஞ் சாலைத் துறையிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைக்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்

நிறைவடைந்துள்ளன. ரூ.6,065 கோடியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணி கள் நடைபெற்று வருகின்றன.

சேலத்தில் ராணுவ தளவாட ஆலை

 சேலம்: ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறு வனமான சேலம் உருக்காலையில் கடந்த 2 நாட்களாக  ஒன்றிய கனரக தொழில் மற்றும் எக்குத் துறை  அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆய்வு செய்த பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற் சாலை அமைக்கும் திட்டம் முதற்கட்ட ஆலோச னையில் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் 4, 5  மாதங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.