tamilnadu

சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்போம் : கியூபா உறுதி

நியூயார்க், மார்ச் 10- கியூபாவின் சோசலிச அமைப்பைக் கைவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், மாறாக, சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்போம் என்றும் கியூபா உறுதியாகத் தெரிவித்துள்ளது. கியூபாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்த விவாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பேசிய கியூபாவின் ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதுவர் ஜூவான் அன்டோனியோ குவின்டானில்லா, “சோசலிசப் பாதையில் கியூபா நடைபோட்டு வருகிறது. அமெரிக்காவின் தடை கள் மூலமாக தொடர் தாக்குதல்கள் இருந்தபோதிலும் சோசலிசப் பாதையில் தொடர்வது என்பதில் கியூபாவின் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். மக்களின் நிலைப்பாடு இன்றைக்கு, நேற்றைக்கு உருவானது அல்லது என்று சுட்டிக்காட்டிய அவர், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இதில் உறுதியாக இருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பிலும் மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பொருளாதாரத் தடைகள் அதி கரிக்கின்றன. கியூபாவின் அரசியல் தலைமையைச் சீர்குலைக்க சில நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மையில் எடுத்தது. இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு சோசலிசக் கோட்பாட்டில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கியூபா மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மிகவும் மோசமானவையாகும். ஒட்டுமொத்த கியூப மக்கள் மீதான மனித உரிமைகள் மீறல் என்று கண்டித்த கியூபத் தூதுவர், கியூபா வின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் தடைகளாக இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு சுட்டிக்காட்டினார். பெருந் தொற்று காலத்தை தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குச் சாதகமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது என்றும் கியூபா குற்றம் சாட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 240 எதிர் நடவடிக்கைகள் கியூபா மீது அமெரிக்காவால் எடுக்கப்பட்டது. டொ னால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இவற்றைக் கையாண்டது. இந்த நடவடிக்கைகளை ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் தொடர்கிறது. இவையனைத்தையும் மீறி கியூப மக்கள் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் போராட்டத்தையும் நடத்து கிறார்கள் என்று அன்டோனியோ குவின்ட்னில்லா குறிப்பிட்டார்.