tamilnadu

img

உழைப்பாளிகளின் கைக்கு அதிகாரத்தை கொண்டு வர பாடுபடுவோம்!

தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

அருப்புக்கோட்டை, மே 2- விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் மே தினத்தன்று நடைபெற்றது. அதில்  சிறப்பு மலர்  வெளியிடப்பட்டது. அருப்புக்கோட்டை பாண்டியன் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் தலைமை தாங்கினார். நகர்  செயலாளர் எஸ்.காத்தமுத்து வரவேற் றார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பூங்கோதை, பி.அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் எம்.என்.எஸ்.நினைவுகள் என்ற சிறப்பு மலரை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட செல்வராஜ் பெற்றுக் கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது,  விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடி எஸ்.ஏ.பெருமாள், மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி யன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்ற னர்.  ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த பூமியில் மத, இன, மொழி என எந்தவித வேறுபாடும் இன்றி அனைவ ராலும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா மே தினம் தான். இந்த உலகில் உழைப்பாளி களால் தான் மிகப்பெரிய நகரங்கள், பெரிய, பெரிய மாளிகைகள், தொழிற் சாலைகள் உருவாகியுள்ளன. ஆனால், அவ்வாறு உழைக்கும் மனி தனின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலை உள்ளது. தான் பெற்ற குழந்தை பட்டினியால் கிடப்பதை பார்க்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் நாடு உள்ளது. 10 விரல்களால் பாடுபடும் விவசாயி கள் 5 விரல்களால் தங்களது உணவை அள்ளிச் சாப்பிட வழியில்லாமல் உள்ள னர். காரணம், அவர்கள் விளைய வைத்த  பொருட்களுக்கு அவர்களே விலையை தீர்மானிக்க முடியாததுதான். பெரும் வியா பாரிகள் தான் விலையை தீர்மானிக்க முடி யும். எனவே, விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடி யாமல் பெரும் துயரத்தில் உள்ளனர். ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரங்களில் நுண் நிதி நிறுவனங்களி டம் கடன் வலைகளில் சிக்கியுள்ள  பெண்கள் அதை திரும்பச் செலுத்த முடி யாமல் பெரும் அவமானத்தை சந்தித்து வருகின்றனர். கடன் கொடுத்தவர்கள் பெண்களை இழிவாக திட்டுகின்றனர். ஒன்றிய பாஜக அரசு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. அதானி உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். இதற்கு மோடி அரசு கார ணம் என அமெரிக்க பத்திரிகை கூறியுள் ளது. எனவே, விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென எம்.பிக்கள் தொடர்ந்து போராடினர். ஆனால், விசார ணைக்குழுவை அமைக்க பாஜக அரசு மறுத்துவிட்டது. அப்படியெனில் அதானி க்கும் மோடிக்கும் தொடர்பு உள்ளது என்று தானே அர்த்தம்!

வங்கிகளில் வாங்கிய கடன்களை அம்பானி, அதானி போன்ற பெரு முத லாளிகள் திரும்பச் செலுத்துவதில்லை. அதற்கான வட்டியைக் கூட செலுத்த மறுக்கின்றனர். அவர்கள் வாங்கிய கடன்களையெல்லாம் பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது. இவை அனைத் தும் மக்கள் கட்டிய வரிப்பணம்ஆகும். மேலும் ரயில்வே, எல்.ஐ.சி ஆகி யவை தனியாரிடம் தாரை வார்க்கப்படு கிறது. இதை மறைக்க மதவெறியை பாஜக மக்கள் மத்தியில் தூண்டிவிடுகிறது. எனவே, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைவரும் சபதமேற்க வேண்டும். நாடு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டுமெனில்  உழைப் பாளிகளின் வாழ்க்கை உயர்ந்த நிலை க்கு செல்ல வேண்டும். அதற்கு ஆட்சி அதி காரம் உழைப்பாளிகளின் கைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.   விழாவில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம்.முத்து குமார், எஸ்.லட்சுமி, வி.முருகன், இடைக் குழு செயலாளர்கள் எல்.முருகன், ஆர்.முத்துவேலு, ஏ.அம்மாசி, பி.நேரு, மார்கண்டன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.               (ந.நி.)