புதுச்சேரியில் பெரும்பான்மை மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும், தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டுடனும் வசிக்கின்ற னர். இங்கு குறிப்பிடத்தக்க அளவில் பட்டியலி னத்தவர் வாழ்கின்றனர். இவர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்கள் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயன்று வரு கின்றனர்.
பிரிவினைக்கான அரசின் விதிமுறைகள்
புதுச்சேரி அரசு பட்டியலினத்தவரை இரண்டு வகையாக பிரித்துள்ளது: Y1964-க்கு முன் பிறந்தவர்கள் - “பூர்வகுடி” பட்டியலினம். Yமற்றவர்கள் - “புலம்பெயர்ந்த” பட்டியலினம். பிரிவினையால் ஏற்படும் பாதிப்புகள் u தந்தை வழி வந்தவர்களுக்கு மட்டுமே பூர்வ குடி சாதிச் சான்று வழங்கப்படுகிறது. uதாய் வழி பட்டியலினத்தவர் புலம்பெயர்ந்த வர்களாக கருதப்படுகிறார்கள். u புலம்பெயர்ந்தவர்கள் பொதுப்பிரிவினராக மாற்றப்படுகிறார்கள். u இதனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. uவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங் களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன.
முக்கிய வழக்குகளும் தீர்ப்புகளும்
முதல் வழக்கு - ஜெயாவின் போராட்டம் (2000) y சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட முதல் வழக்கு. y தந்தை வழியினருக்கு மட்டுமே சாதிச் சான்று வழங்கும் முறையை எதிர்த்து தாக்கல். y நீண்ட விவாதங்களுக்குப் பின் அரசின் உத்த ரவு ரத்து செய்யப்பட்டது. y தாய் வழியிலும் பூர்வகுடி சாதிச் சான்று வழங்க உத்தரவிடப்பட்டது. y இதை எதிர்த்து புதுச்சேரி அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு. y ஆனால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இரண்டாவது வழக்கு - சிவா கென்னடி ஜான்சன் nஇவ்வழக்கில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு வாதாடினார். n பட்டியலின குடும்பங்களின் பாதிப்புகளை ஆதாரங்களுடன் விளக்கினார். nமுந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை முன்னு தாரணமாக காட்டினார். n அனைவருக்கும் பூர்வகுடி பட்டியலின சான்று வழங்க உத்தரவிடப்பட்டது. n ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் தனித்தனியே நீதிமன்றம் வர வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பு. மூன்றாவது வழக்கு - புலம்பெயர்ந்தோரின் நிலை l புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து, மீண்டும் திரும்பியவர்களின் நிலை மிக மோசம். lபதிவு ஆவணங்கள் இன்றி சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் அவலம். lபலர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத நிலை. நிர்வாக முன்னேற்றம் இந்நிலையில், 2023-ல் வருவாய்த்துறை வடக்கு பகுதி துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் முக்கிய நடவடிக்கை எடுத்தார்: t தாயின் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்க உத்தரவு. t கால தாமதம் தவிர்க்க வேண்டும் என அறி வுறுத்தல். t இதனால் அலுவலகங்கள் விரைவான நட வடிக்கை எடுக்கத் தொடங்கின.
ஸ்ரீநிஷாவின் போராட்டம் - ஒரு முன்னுதாரண வெற்றி
குடும்பப் பின்னணி k ஸ்ரீ நிஷா என்ற மாணவியின் தந்தை குமார் - சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி. k தாய் பூமாலா - புதுச்சேரி பூர்வீக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். k 2004-ல் புதுவை கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீநிஷா பிறப்பு. k வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பம். k சிவப்பு நிற குடும்ப அட்டை பெற்றவர்கள். கல்வி சாதனைகள் F ஸ்ரீ நிஷா பத்தாம் வகுப்பில் 98 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றார். F பன்னிரண்டாம் வகுப்பில் 75 விழுக்காடு. F நீட் தேர்வில் மூன்று முயற்சிகள். F முதல் முயற்சி: 65 மதிப்பெண்கள். F இரண்டாவது முயற்சி: 313 மதிப்பெண்கள். F மூன்றாவது முயற்சி: 385 மதிப்பெண்கள். இறுதி வழக்கும் வெற்றியும் D தாயார் வழி பூர்வகுடி சாதிச் சான்றிற்கு ஸ்ரீ நிஷா விண்ணப்பம் செய்தார். D முதலில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் சான்று வழங்கப்பட்டது. D பின்னர் பூர்வகுடி பட்டியலின சான்று கிடைத்தும் மருத்துவ கலந்தாய்வில் சிக்கல். D இவ்வழக்கில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு வாதாடினார். D உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு சார்பில் சாதகமான தீர்ப்பு. D புதுச்சேரி மருத்துவ மற்றும் அறிவியல் நிறு வனத்தில் சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.
தொடரும் சமூக சவால்கள்
புள்ளி விவர முரண்பாடுகள் Gபுதுச்சேரியில் 16% பட்டியலின மக்கள் தொகை. G 7% புலம்பெயர்ந்தவர்கள் என மதிப்பீடு. G அனைத்து திட்டங்களுக்கும் மொத்த எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படுகிறது G ஆனால் சலுகைகள் பூர்வகுடி மக்களுக்கு மட்டுமே. உரிமை மறுப்புகள் Y கல்வி, வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு. Yஇலவசக் கல்வி பூர்வகுடி மக்களுக்கு மட்டுமே Yசட்டமன்ற பிரதிநிதித்துவ வாய்ப்புகள் மறுப்பு. Yகுடும்பத்தில் ஆண், பெண் பாகுபாடு. Yஒரே குடும்பத்தில் தந்தை வழி, தாய் வழி பாகுபாடு. எதிர்கால நம்பிக்கை இந்த முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீநிஷாவின் வெற்றி இந்த நீண்ட சமூக நீதிப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது. இதில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபி மன்யுவின் சட்டப் போராட்டம் பல ஏழை மாணவர்க ளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. குடும்பத்தின் முதல் தலைமுறை மருத்துவ மாணவியாக ஸ்ரீநிஷா வின் வெற்றி, புதுச்சேரியின் பட்டியலின மக்க ளுக்கு புதிய எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது. -
சி.ஸ்ரீராமுலு