tamilnadu

img

20 ஆயிரம் பள்ளிகளில் மழலையர் வகுப்பு இன்று தொடக்கம்

சென்னை,பிப்.15- தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலுக்கு இடையே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் பணி  நடக்கிறது. கொரோனா தொற்று பரவல்  ஆரம்பித்தது முதல் மழலையர் பள்ளி கள் மூடப்பட்டன. சிறு குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு 2 ஆண்டுகளாக மழலையர் பள்ளி களை திறக்க முன்வரவில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து கட்டுக்குள் இருப்ப தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மழலையர் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று  16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப் படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து,  மழலையர் பள்ளிகள் திறக்க ப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 20  ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  செயல்பட்டு வரும் நிலையில் மழலை யர் வகுப்புகள் மட்டும் நடைபெறாமல் இருந்து வந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு புதன் கிழமை (பிப்.16) பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி.,  யு.கே.ஜி. குழந்தைகளுக்கு வகுப்பு கள் ஆரம்பிக்கின்றன. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். பள்ளிக்கூட வாசனையே தெரியா மல் 2 வருடங்களாக வீடுகளிலேயே முடங்கி, ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்த குழந்தைகள் புதன்கிழமை (பிப்.16)  முதன்முதலாக நேரடி வகுப்பு களுக்கு செல்கிறார்கள். ஆசிரியர்களை நேரில் பார்க்கும் சூழ்நிலையும், அவர்களின் அன்பும் பரி வும் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பும் மீண்டும் உருவாகி உள்ளதை  எண்ணி ஆசிரியர்களும், பெற்றோர் களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.