tamilnadu

img

கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்: ஒன்றிய அரசு அனுமதி

சென்னை,செப்.16- சென்னை மெரினா கடற்கரை யில் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு ஒன்றிய  அரசு முதல் கட்ட அனுமதி வழங்கி யுள்ளது. சென்னை மெரினா கடற்கரை யில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து, வங்கக் கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி  ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒன்றிய அரசு முதல் கட்ட  அனுமதியை வழங்கி உள்ளது. அதேநேரம் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;