சென்னை, பிப்.21- காஞ்சிபுரம் 12-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சூரியபாரதியை தாக்கிய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி, 12-ஆவது வார்டில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் வேட்பாளர் தோழர் எம்.சூரியபாரதி அவர்களை காஞ்சிபுரம் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியதோடு, பொய் வழக்கும் புனைந்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாககண்டிக்கிறது. தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் விதிமுறை களை விளக்கிக் கொண்டிருந்த போது சந்தேகம் எழுப்பிய சிபிஐ (எம்) வேட்பாளர் தோழர் எம்.
சூரிய பாரதியை காஞ்சிபுரம் நகர ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் என்பவர் காவல் படையுடன் சூழ்ந்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதை பார்த்த அவரது தாயார் எம். கன்னிகா அவர்கள் தன் மகனை அடிக் காதீர்கள் என முறையிட்ட போதும் அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கேவலமாக பேசியதுடன் பொய் வழக்கும் புனைந்துள்ளார். அவரது தந்தையும், காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தலைவருமான தோழர் இ. முத்துக்குமார் அவர்களையும் மிரட்டியுள்ளார். காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி.யின் இந்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டு மல்ல, சட்டத்திற்குப் புறம்பான செயலாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, திட்டமிட்டு உள்நோக்கத் தோடு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி., வினோத் சாந்தாராம் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தோழர்கள் எம். சூரியபாரதி, அவரது தாயார் எம். கன்னிகா, மாணிக்கம், ரவி, பிரேம்குமார், சிவா ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத் தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும், தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களை யும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.