tamilnadu

img

மன்னிப்பு கோரி க.பொன்முடி அறிக்கை

மன்னிப்பு கோரி க.பொன்முடி அறிக்கை

சென்னை, ஏப்.12- ஒரு உள்ளரங்கக் கூட்  டத்தில், தகாத பொருளில்  தவறான சொற்களைப் பயன்  படுத்தி நான் பேசிய பேச் சுக்கு மனப்பூர்வமாக மன்  னிப்பு கேட்டுக் கொள்கிறேன்  என அமைச்சர் க. பொன்  முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில், “இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப் பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க் கையில் உள்ள எனக்கு இது போன்ற தடுமாற்றம் ஏற்பட்  டது குறித்து நான் மிகவும்  வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமை ந்து விட்டது குறித்தும், அவர்  கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான்  மிகவும் மனம் வருந்து கிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய  பேச்சுக்கு மீண்டும் மீண்டும்  மன்னிப்புக் கேட்டுக் கொள்  கிறேன்” என கூறியுள்ளார். முன்னதாக, சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கட்சிப்  பதவியிலிருந்து விடுவித்து திமுக தலைமை நடவ டிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.