tamilnadu

பிபிசி அலுவலகத்திற்குள் புகுந்தது வருமான வரித்துறை

மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு ஒரு மாதம்

புதுதில்லி, பிப். 14 - பிரதமர் மோடிக்கு எதி ரான ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி அலுவல கங்களுக்குள் வருமான வரித்துறை புகுந்தது. குஜராத்தில் 2002 பாஜக ஆட்சியின் போது இஸ்லாமி யர்களுக்கு எதிராக அரங்கேற் றப்பட்ட இனப்படுகொலை யை பிபிசி அம்பலப்படுத்தி யிருந்தது. இந்நிலையில் புது தில்லி, மும்பை ஆகிய இடங் களில் உள்ள பிபிசி அலு வலகங்களுக்குள் செவ்வா யன்று காலை 11.30 மணியள வில் புகுந்த 30-க்கும் மேற் பட்டவருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த ஊழியர்களின் செல்போன் கள், மடிக்கணினிகளை கைப்பற்றினர்.  அலுவல கத்தை மூடி சீல்வைத்தனர். பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை நிர்ண யம் ஆகியவற்றில் நடந்த தாகக் கூறப்படும் முறை கேடுகள் தொடர்பாகவே, வருமான வரித்துறை அதி காரிகள்,

இந்த சோதனை யில் ஈடுபட்டு அலுவலகங் களுக்கு சீல் வைத்ததாககூறப்பட்டுள்ளது. சோதனை நடந்து கொண்டி ருந்த நேரத்தில், இதுதொடர்  பாக டுவிட்டரில் அறிக்கை வெளியிட்ட பிபிசி நிறுவனம், “வருமான வரி அதிகாரிகள் தற்போது புதுதில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலு வலகங்களில் உள்ளனர், நாங்  கள் முழுமையாக ஒத்து ழைக்கிறோம். இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தது. ஆனால், இது வருமான வரிச் சோதனையல்ல; ஒரு கணக்கெடுப்புதான் என்று மோடி அரசின் வருமான வரித்  துறை கூறியது.  “எங்களுக்கு சில தெளிவு கள் தேவை, அதற்காக எங்கள்  குழு பிபிசி அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி வருகி றோம். எங்கள் அதிகாரிகள் கணக்குப் புத்தகங்களைச் சரி பார்க்கச் சென்றுள்ளனர், இவை சோதனைகள் அல்ல” தெரிவித்தது. இந்நிலையில், பிபிசி-க்கு  எதிரான மோடி அரசின் இந்த  வருமான வரித்துறை சோத னைக்கு எதிர்க்கட்சிகள் கண்ட னம் தெரிவித்துள்ளன. “இங்கே நாங்கள் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு  (ஜேபிசி) விசாரணையைக் கேட்கிறோம், அங்கு அர சாங்கம் பிபிசி-யை வேட்டை யாடுகிறது. வினாஷ் காலே விப்ரித் புத்தி (அழியப் போகும் நேரத்தில்தான் ஒருவர் தவ றான முடிவுகளை எடுக்கிறார்)” என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்  ராம் டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டார்.

சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவல கங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ‘மோடி பிரச்சனை’ (‘The  Modi Question’) என்னும் ஆவணப்படத்தை ஒளிபரப்பிய தற்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை இவ்வாறு அப்பட்டமான முறையில் மிரட்டித் துன்புறுத்தப் பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஊடகங்களை வருமானவரித்துறையினர் மற்றும் இதர முகமைகள் மூலமாக சோதனை செய்து மிரட்டுவது மோடி அரசாங்கத் தின் வழக்கமான உத்தியாகும். இது இப்போது இந்தியா வில் செயல்படும் அந்நிய ஊடகத்திற்கும் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. இந்த வலுக்கட்டாயமான நடவடிக்கை, ஊடக விமர்சனத்தை நசுக்க, மோடி அரசாங்கத்தின் சர்வாதிகார  ஆட்சி என்ற சித்திரத்தை சர்வதேச அளவிலும் கொண்டு செல்லும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன்

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் தில்லி அலுவலகத்தில் ஐடி ரெய்டு,  ஊழியர்களுக்கு மிரட்டல். ஐடி துறை, அடியாள் துறை யானதா?. உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்கு முறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை.மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, கேலிக் கூத்தாக்குது மோடி கூட்டம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.