tamilnadu

img

நீயும் உறுதி எடய்யா! - ஆர்.வனஜா நடராஜன், கோவை

தேர்தல் வரப் போகுதய்யா.. 
தேடி அவன் வருவான் யா.. 
மதம், இனம் மொழி என்றே பிரிப்பான்யா.. 
மக்கள் மனசுல விஷ விதையை விதைப்பான்யா.. 
கறுப்புப்பணம் பிடிக்கறேன்னான்... 
கள்ள பணம் ஒழிக்கறேன்னான்.. 
பணமதிப்பை இழக்க வச்சு பதட்டமாக்கினான்.. 
மதிப்பிழந்த பணத்தை மாத்த மக்கள அலைய விட்டான்.. 
கார்ப்பொரேட்டு அவன் கூட்டு.. 
பொது துறைக்கு வச்சான் வேட்டு..
அரசாங்க சொத்தையெல்லாம் விக்கறானய்யா.. 
அயோத்தி ராமர காட்டி கண்ண கட்டுறானய்யா.. 
பெண்ணுக்கிங்க பாதுகாப்பில்ல.. 
பெண் வன்கொடுமைக்கோ குறைச்சலில்ல.. 
கோயில் கருவறையும் குற்றக்கூடங்கள் ஆகுதையா.. 
கேள்வி கேட்டவனெல்லாம் கைதியாய் சிறைக்குள் வாடறானய்யா.. 
மத்தியிலதிகாரத்தை வச்சு..
மாநில உரிமையை நசுக்கிப்புட்டு..
“மன்கி பாத்”ல மாயாஜாலம் காட்டுறானய்யா.. 
“மனு ஸ்மிருதி”னு மக்கள பழமைக்கு தள்ளுறானய்யா.. 
சட்டங்களை வளச்சுப்புட்டான்.. 
உரிமைகளை பறிச்சுப்புட்டான்.. 
ஏழை பணக்காரரிடைவெளி கூட்டிப்புட்டான்.. 
இந்தியாவின், “சௌக்கிதார்”னு சொல்லிக்கிட்டான்.. 
வாக்கு சீட்டு துருப்பு சீட்டு.. 
வாய்ப்ப நீயும் மனசில் வச்சு.. 
பாசிச பிஜேபி ஆட்சிய தூக்கி வீசிடய்யா.. 
பாரினில் ஜனநாயகம் தழைத்திட நீயும் உறுதி எடய்யா!