tamilnadu

பொதுவேலைநிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்களும் பங்கேற்பு

சென்னை, மார்ச், 20 - மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள அகில இந்திய போதுவேலை நிறுத்தத்தில்தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கமும் கலந்து கொள்கிறது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளியில்  உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தரம் உயர்த்தி அதில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அரசு உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். இவற்றை நிறைவேற்றாவிடில், மே 9 ஆம்  தேதி பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப் படும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மார்ச் 22 அன்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட  தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய  அரசின் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 28, 29 தேதிக ளில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டங் களில் ஆசிரியர்கள் முழுமையாக பங்கேற்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.