tamilnadu

img

தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது

சென்னை,ஜன.9- சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையைவிட தற்போது வேகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மற்றும், கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை , ராஜீவ்காந்திஅரசு மருத்துவனை, கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய வைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கை களில் 58 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 3,747 ஆக்சிஜன் படுக்கைகளில், 18 சதவீதம் (699 படுக்கைகள்) மட்டுமே நிரம்பி உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், 231 நோயா ளிகள் எஸ் ஜீன் வீழ்ச்சியுடன் காணப்பட் ்டனர், ஆனால் அவர்களில் யாருக்கும் ஆக்சிஜன் தேவைவில்லை. மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்து வமனை தேவைப்படும்

நோயாளிகள் தடுப்பூசி போடாதவர்கள் என்று மருத்து வர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது சிகிச்சைபெறும் 17 நோயாளிகளில் 11 பேர் தடுப்பூசி போடாதவர்கள். ” என்று டாக்டர் தேரனிராஜன் கூறினார். இதேபோல், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர் ஜெயந்தி கூறுகையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  உள்ள 10 நோயாளிகளில் 8 பேர் தடுப்பூசி போடாதவர்கள். சென்னை நகரத்தின் மக்கள் தொகையில் 92 சதவீத பேர் முதல் டோசும் 72 சதவீத பேருக்கு இரண்டாவது டோசும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது தடுப்பூசி போடப்படாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய வர்கள், தங்கள் தடுப்பூசிகளை முன்கூட் ்டியே போட்டுக்கொள்ள வேண்டும். நகரில் உள்ள மருத்துவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில், மக்கள் இரண்டு டோஸ் களும் தடுப்பூசி போட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகி இருப்பது தெரிந்தது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகவும் லேசான அறி குறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.