மதுரை, பிப்.17- மதுரை மாநகருக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக பண்ணைப் பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜீத் சிங் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி - உள்கட்ட மைப்பு மேம்பாட்டு நிறுவன (டுபிட்கோ) கூடுதல் தலைமை செயலாளரும் நிர்வாக இயக்குநருமான மரு.நீரஜ் மித்தல் ஆகியோர் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். கண்ணாபட்டி பகுதியில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணி களையும், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளையும் டுபிட்கோ நிர்வாக இயக்குநர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பெரி யார் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்று வரும் வணிக வளாக பணிகளை யும் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அறிஞர் அண்ணா மாளிகை 3-ஆவது தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை டுபிட்கோ நிர்வாக இயக்குநர், மேயர் வ. இந்திராணி பொன்வசந்த், ஆணை யாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். ஆய்வின்போது, டுபிட்கோ மேலா ளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.