சாலையை சீரமைக்க வலியுறுத்தல்'
தருமபுரி, ஜூன் 24- குண்டும், குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும், என பொது மக்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி வட்டம், வெள்ளோலை ஊராட்சிக்குட்பட்ட அத்திமா நகருக்கு செல்லும் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது குண்டும் குழியுமாக, ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பழுதடைந்துள்ள இச்சாலையை தான் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அது மட்டுமின்றி அவசர நிலைக்கு மருத்துவமனைக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சாலையை சீர மைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.