தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்க பெயர் பலகை நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை வாயிலில் திறந்து வைக்கப்பட்டது. சங்கத்தின் செங்கொடியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஏற்றி வைத்து வாழ்த்திப் பேசினார். பெயர் பலகையை சாலைப் போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.