பாஜக போன்று வகுப்புவாத சம்பவங்களில் தொடர்பு
3 எம்எல்ஏக்களை நீக்கிய சமாஜ்வாதி
உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சியாக இருப்பது சமாஜ்வாதி ஆகும். இதன் தலை வராக முன்னாள் முதலமைச்சர் அகி லேஷ் உள்ளார். இந்நிலையில், திங்களன்று கட்சி விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தாக கூறி 3 எம்எல்ஏக்களை சமாஜ்வாதி கட்சி நீக்கம் செய்துள்ளது. கோசாய் கஞ்சைச் சேர்ந்த அபய் சிங், கவுரிகஞ்சைச் சேர்ந்த ராகேஷ் பிரதாப் சிங் மற்றும் உன்சாஹரைச் சேர்ந்த மனோஜ் குமார் பாண்டே ஆகிய 3 பேர் நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் சமாஜ்வாதி கட்சி கூறுகையில்,”நீக்கப்பட்ட 3 எம்எல்ஏக்க ளும் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை ஊக்குவித்தனர். அதே போல விவசாயிகள், பெண்கள், இளை ஞர் மற்றும் வணிக எதிர்ப்புக் கொள்கை களை எச்சரிக்கைக்கு பின்பும் ஆதரித்த னர். அதனால் அவர்கள் நீக்கப்பட்டுள் ளனர். பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்), மதநல்லிணக்கம், மக்கள் நலன் போன்றவை கட்சியின் முக்கிய சித்தாந்தங்களில் ஒன்றாகும். அதனால் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய சித்தாந்தம் மற்றும் கொள்கை களுக்கு எதிரான எந்தவொரு நடவ டிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக செயல் பட்ட எம்எல்ஏக்கள் உடனே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மனமாற்றத்திற்காக வழங்கப்பட்ட கருணைக் காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. மீத முள்ள நபர்களுக்கான கருணைக் காலம் அவர்களின் நன்னடத்தை காரணமாக தொடர்கிறது. எதிர்காலத்திலும் மக்கள் விரோத சக்திகளுக்கு கட்சியில் இட மில்லை. மேலும் கட்சியின் முக்கிய சித்தாந்தத்தை எதிர்க்கும் நடவடிக்கை கள் எப்போதும் மன்னிக்க முடியாததா கவே கருதப்படும்” என அறிக்கை மூலம் அகிலேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.