உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், சமூக நீதியை பின்பற்ற வலியுறுத்தி வெள்ளியன்று சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் உரையாற்றினார். பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.