சென்னை, மே 12- எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம் பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே வெள்ளியன்று (மே 12) உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. இதனை துவக்கிவைத்து உ.வாசுகி பேசுகை யில், “நாம் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாப்பதற்காக, உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உலக செவிலியர் தினத்திலும் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம்”என்றார். அமைப்பின் பொதுச்செயலாளர் சுபின் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் சுமார் 13 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பணியமர்த்தும் போது இரண்டு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் என்றும், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் 8 வருடங்கள் கடந்த பிறகும் சுமார் 2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”என்றார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. அங்கெல்லாம் நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மாநில இணை செயலாளர் து.அஷ்வினி கிரேஸ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் சா.டேனியல் ஜெயசிங், அண்ணா குபேரன், உ.சுமதி, அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழுத் தலைவர் சா.பெருமாள் பிள்ளை, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உ.சண்முகம், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.ஏழுமலை, மருத்துவத்துறை தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.விவேகானந்தன், தி ரேடியாலஜிகல் உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரா.ஈஸ்வரன், மருத்து வத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.வெங்கோப ராவ், அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் க.அன்பழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி. கோபிகுமார் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.