காயமடைந்த வீரருக்கு இரக்கம்
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி-20 தொடரைப் போன்று தென் ஆப்பிரிக்கா நாட்டில் மசான்சி சூப்பர் லீக் என்ற பெயரில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் பார்ல் ராக்ஸ் அணி, நெல்சன் மண்டேலா பே கியான்ட்ஸ் அணிகள் மோதின. எலிமினேட்டர்,இறுதிச் சுற்று என 2 வாய்ப்புகளை வழங்கும் முக்கியமான லீக் ஆட்டம் என்பதால் இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. வெற்றிக்காக 168 ரன்களை துரத்திச் சென்ற பே கியான்ட்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப் பட்டது. 19-வது ஓவரை பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் இசுரு உதனா வீசினார். தென் ஆப்பிரிக்காவின் தேசிய வீரர் ஹெய்னோ குன் அந்த ஓவரை எதிர்கொண்டார். கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட பொழுது உதனா வீசிய பந்து ஹெய்னோ குன்னை தாக்கியதால் நிலை தடுமாறி கிரீஸை விட்டு வெளியேறினார். உதனா கையில் பந்து உள்ளதால் ஹெய்னோவை எளிதாக ரன் அவுட் செய்யலாம். ஆனால் ஹெய்னோவின் காயத்தை நொடிப் பொழுதில் உணர்ந்த உதனா ரன் அவுட் செய்யாமல் கிரிக்கெட் உலகிலும் மனிதநேயம் மலரும் என்பதை உணர்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் பார்ல் ராக்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றாலும், அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் உதனாவின் செயலை அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.மூர்க்கத்தன த்துக்குப் பெயர் விளையாட்டில் வெற்றிக் காக வீரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அடிதடி கூட நடக்கும். இதனால் மனிதநேயம் என்ற சொல்லுக்கு விளையாட்டு உலகில் சரிவர அர்த்தம் கிடையாது. இலங்கை வீரர் உதனாவின் செயலால் தற்போது அதற்கு அர்த்தம் கிடையாது.