tamilnadu

img

மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த நாகைமாலி எம்எல்

நாகப்பட்டினம், ஆக.18 - பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள  ஏறும் சாலை விரிவாக்கத்திற்கு மாற்று  இடங்கள் வழங்கிய பின்னரே வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் ஊராட்சியில் ஏறும்சாலை என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி  வேலை செய்து வருபவர்களாகவும், நாகை நகரத்தில் தினக்கூலி அடிப்படை யில் வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இப்பகுதியை அடுத்த சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரத்தூர் கிராமத்தில் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு செல்வதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் ஏறும்சாலையில் உள்ள சுமார் 40 குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளா கின்றன. இதனையடுத்து வீடுகளை காலி செய்யச் சொல்லி அரசு துறை சார்பில் தொடர்ந்து மக்களுக்கு நெருக்கடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் அப்பகுதியில் வசித்து  வரும் மக்கள், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியை சந்தித்து தங் களுடைய குறைகளை தெரிவித்தனர். அவர், மக்களுக்கான மாற்று இடத்தை தேர்வு செய்து, அவர்களுக்கான குடி யிருப்புகளை உத்தரவாதப்படுத்திய பிறகு இப்போது குடியிருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் பேசினார். பின்பு மக்களி டம் சென்று அவர்களுக்கான பாது காப்பை உறுதிப்படுத்தினார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட 40 குடும்பங்களுக்கும் தனியாக இடத்தை தேர்வு செய்து, அவர்களுக்கான பட்டா வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டு ஏற்பாடு செய்தார். இதனால், அனைத்து குடும்பங்களுக்கும் குடி மனைப் பட்டா தயாரான நிலையில், மிக விரைவில் அம்மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி சம்பந்தப்பட்ட மக்களைச் சந்தித்து கூறினார்.  இந்நிகழ்வின் போது சிபிஎம் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. வடிவேல் உடனிருந்தார்.