சென்னை, மார்ச் 24- என்எல்சி விவகாரத் துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ள தாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்ன ரசு தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திற் காக நிலம் கையகப்படுத் தப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து தொடர்ந்து போராட் டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவை யில் திமுக, அதிமுக, சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர் கள் கவன ஈர்ப்பு தீர்மானத் தைக் கொண்டு வந்தனர். இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு பதில் அளித்து பேசுகை யில், “என்எல்சி நிறுவனத் தில் தற்போது 1,711 காலி பணியிடங்கள் விரைவில் நிர ப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரி வித்துள்ளது”என்றார். என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயி களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங் கப்படும். மறுவாழ்வுக்கு மாற்று இடம் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதை உறுதி செய்ய உயர்மட்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நட வடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார். ரூ.100 கோடி சிஎஸ்ஆர் நிதியை கடலூர் மாவட் டத்தில் செலவு செய்ய என்எல்சி நிறுவனம் ஒப்பு தல் தெரிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து 60,000 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தி தனியாருக்கு கொடுக்கப்போவதாக கூறுவதில் உண்மை யில்லை. தேவைக்கு அதிக மாகவும் தேவையில்லா மலும் நிலங்களை கைய கப்படுத்தும் பணியை அரசு ஒருபோதும் மேற்கொள் ளாது. தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை என்எல்சி நிறு வனம் பூர்த்தி செய்து வரு கிறது. நமது மின்தேவையை கருத்தில் கொண்டு அனை வரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.