tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சிறுபான்மை மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும்  பேசியதில்லை என்கிறார் பிரதமர். நம்மை முட்டாளாக்கும் முயற்சி. ஒருவர் இப்படி கூட பொய் பேச  முடியுமா? மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றுதான் பேசுகிறேன் என்கிறார். இந்திய மக்களை “பாபா பிளாக் ஷீப்” போல எண்ணு கிறார் போலும். இட ஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் அல்ல; பின் தங்கிய தன்மை அடிப்படையில்தான் என்பதை அவர் அரசியலமைப்பு சட்டத்தை படித்திருந் தால் அறிந்திருப்பார். அனைத்து மதங்களிலும் பின்தங்கியவர்கள் உள்ளனர். பிரதமரும் பாஜகவும் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறல்! தேர்தல் ஆணையம் உணர்வுபூர்வ மாகவே அமைதி காப்பது “நியாயமான சுதந்தரமான” தேர்தலை நடத்த அரசியலமைப்பு சட்டம் விதித்த கடமைக்கு துரோகம் என்பதற்கு சமம். இந்த ஆணை யம் தனது அரசியலமைப்பு சட்ட கடமையை ஆற்றுமா? ஜனநாயகத்துக்கு ஆபத்தான விளைவுகள். தேர்தல்  நடைமுறைகளை சிலர் தமக்கு சாதகமாக கடத்த அனு மதிக்கலாமா? மக்கள் எழுச்சியுற்று எதிர்க்க வேண்டும்.

;