மத மோதல், வன்முறையை தூண்டும் பேச்சு காவல்துறை விசாரணைக்கு எச். ராஜா ஆஜராக வேண்டும்!
சென்னை, ஜூன் 23 - மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கில், காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எச். ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், இந்து முன்னணி சார்பில் மதுரை பழங்கா நத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகை யில் பேசக்கூடாது, முழக்கங் கள் எழுப்பக் கூடாது என இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிபந்தனை கள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், நிபந்தனைகளை மதிக்கா மல், மத மோதலைத் தூண்டும் வகையில் எச். ராஜா பேசினார். இதையடுத்து, மத மோதலை தூண்டும் வகையில் பேசியது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக எச். ராஜாவுக்கு காவல்துறை நோட்டீ சும் அனுப்பியது. ஆனால், இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீமன்றத் தில் எச். ராஜா வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முரு கன் முன்பு திங்களன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, ‘காவல்துறை நோட்டீஸை ரத்து செய்ய முடியாது’ என்று கூறி எச். ராஜாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர எச். ராஜாவுக்கு அதிகாரம் இல்லை என கூறிய நீதிபதி வேல்முருகன், மேலும் எச். ராஜா காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.