tamilnadu

img

உன்னதமான இயக்கத்தால் தூய்மையாகும் அரசு மருத்துவமனைகள்

சென்னை, ஏப்.3 உன்னதமான இயக்கத்தால் அரசு மருத்துவமனைகள் தூய்மை யாக மாறி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார  அளவிலான மருத்துவ மனைகள், உயர் சிகிச்சைகளை அளிக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவ வமனைகள் என மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செய ல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைகள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் நபர்கள் புற நோயாளிகளாகவும், 46,000 நபர்கள் உள் நோயாளி களாகவும்  சிகிச்சை  பெற்று பயன்பெறுகின்றனர்.  மேலும் 1,500 குழந்தைப் பிறப்புகளும் நிகழ்கின்றது.

அரசின் மருத்துவச் சேவை களை பெறுதவற்கு வரும் லட்சக்கணக்கான பயனா ளிகளின் அரசு மருத்துவ மனைகளைப் பற்றிய மதிப்பீ டுகள் சிறப்பாக அமைய, இம்ம ருத்துவமனைகள் தூய்மை யுடனும், முறையான பராமரிப்பு களுடனும் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய பின்னணியில் செயல்படுவது  அவசியம் என அரசு கருதியது. மருத்துவச் சேவைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சைப் பிரிவுகள், உள் நோயாளி பிரிவுகள், வெளி நோயாளி பிரிவுகள் என வகைப் படுத்தப்பட்டு அதற்கு உரிய தனித்தன்மையுடன் நோய்த்தொற்றுகள் பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டு பராமரி க்கப்படுகிறது. எனவே இப்பிரிவுகளில் மருத்துவமனையில்  சுத்தம் செய்யும் முறை மணிக்கு ஒரு முறை என்ற விகிதம் முதல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை என தேவையின் அளவின் அடிப்படையில் வகைப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மருத் துவமனைகளில் நோய்த் தொற்றை அதிகப்படுத்தும் பூச்சிகள், எலிகள், சுற்றி திரியும் விலங்குகள் , கொசுக்கள் ஆகிய வற்றையும்  கட்டுப்படுத்துவதும் முக்கிய நடவடிக்கை ஆகும்.

அரசு மருத்துவமனைகள் சுத்தமுடனும், சுகாதா ரத்துடனும் தினந்தோறும்  பராம ரிக்கப்பட்டு வருகின்றன. இப்ப ணியை மேலும் வலுப்படுத்த, பிற துறைகளின் உதவியுடன் மருத்துவமனை வளாகங்களை தூய்மைப்படுத்தவும், பராம ரிக்கவும்  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.“நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற  குறிக் கோளுடன் கூடிய இப்பணி  ஏப்ரல் 1 ம் தேதி தொடங்கியது. இது இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை என இவ்வியக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டு ஆண்டு முழு வதும்  பராமரிக்கப்படும்.

இவ்வியக்கம் தொடங் கப்பட்ட ஏப்.1 ஆம் தேதியன்று   ஒரு நாளில் தமிழ்நாட்டில் 5,120 சுகாதாரத்துறை பணி யாளர்கள், 2,179  உள்ளாட் சியமைப்பு ஊழியர்கள் மற்றும் 1,134 தொண்டு நிறுவன பணி யாளர்களும் இச்சேவை யில் உட்படுத்தப்பட்டு 6,596 கழிவறைகள் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், இத்தூய்மை  இயக்கத் தின் மூலம் முதல் நாளில் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ மனைகளில், 34,00,235 சதுர அடி மருத்துவமனை பரப்புகள் சுத்தம் செய்யப்பட்டுப் பராம ரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மனைகளிலும் 91,538  கிலோ எடையுள்ள  உயிர் மருத்து வக் கழிவுகளும் நெறிமுறை களின்படி சேகரி க்கப்பட்டு அகற்றப் பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.