சென்னை, ஜூலை 3- பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் நாடு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் ஹரியா னாவை எதிர் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண் கள் கால்பந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் கோப் பையை வென்று சாதனை படைத்தது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி யின் சார்பில் டி.தேவி, என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப் பிரியா, எம்.சுபாஷினி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரிய தர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோ தினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ்.சண்முகப்பிரியா, ஆர்.யுவ ராணி, என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ்.கோகிலா மற்றும் வி.கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணி யில் உள்ள 12 வீராங் கனைகள் தமிழ்நாடு விளை யாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திங்களன்று (ஜூலை 3 ) தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செய லர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.