‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்திற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் மின் ஊழியர் சங்கத் தலைவர்கள் நேரில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். எஸ். மூர்த்தி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம்), எஸ். ராஜேந்திரன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு -சிஐடியு), ஏ. சேக்கிழார் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்ப்ளாயீஸ் பெடரேஷன்), வி.எஸ். சம்பத்குமார் (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம்), கே. அருள்செல்வன் (தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு) உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.