திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி மாநகரில் 65 வார்டுகளி லும் குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறு வனங்களில் உருவாகும் திடக்கழிவு களை இல்லம் தோறும் சென்று சேக ரிக்கும் பணி தனியார் மயமாக்கப் படுவதாக திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலை மையில், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னி லையில் வியாழனன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் கழிப்பிட வசதி, கட்டிட வசதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், வார்டு பணிகள், தெருவிளக்கு பணிகள் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் 53 -வது தீர்மானத்தில், ‘‘திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மாநகராட்சியின் 65 வார்டு பகுதிகளிலும் உள்ள குடி யிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங் களில் உருவாகும் திடக்கழிவுகளை இல்லம் தோறும் சென்று சேகரிக்கும் பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணியாளர்களையும், தேவைப்படும் வாகனங்களில் மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் வாகனங்களை அதற்கு நிர்ண யம் செய்துள்ள வாடகை செலுத்தி யும், தேவைப்படும் கூடுதல் வாகனங் களை நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து மேற்கொள்ளும் பணிக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரின் செயல்முறை உத்தரவுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், ஒப்பந்த புள்ளி கூர்ந்தாய்வு குழு பரிசீலனை செய்து தனியார் நிறுவனத்திற்கு பணியினை மேற்கொள்ள அனு மதி அளிக்கப்படுகிறது. மேலும் செல வினத்தை 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூபாய் 40 கோடியிலிருந்தும், மற்றும் 15-ஆவது மத்திய நிதி குழு 2022-23 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தலைப்பில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிதி ரூ.22 கோடியில் இருந்தும் மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம்’’ என கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் வீடுகள் வர்த்தக நிறு வனங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சி 65 வார்டுகளிலும் குப்பை அள்ளும் பணி தனியார்மய மாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். (ந.நி.)